தினகரன் 08.05.2013
தார்சாலை அமைக்கும் பணி
சத்தியமங்கலம், : சத்தியமங்கலம் நகராட்சியில் சருகுமாரியம்மன் கோயில் முதல் குள்ளங்கரடு வரை தார்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல்நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா தார்சாலை அமைப்பதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4.60 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். தார்சாலை அமைக்கும் பணியை சத்தி நகராட்சித்தலைவர் ஓ.எம்.சுப்ரமணியம் தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில், நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி, பொறியாளர் கணேசன், முன்னாள் நகராட்சித்தலைவர் எஸ்.ஆர்.வேலுச்சாமி, கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், ஈஸ்வரன், முன்னாள் கவுன்சிலர் ஜோசப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தார்சாலை அமைக்கும் பணி
சத்தியமங்கலம், : சத்தியமங்கலம் நகராட்சியில் சருகுமாரியம்மன் கோயில் முதல் குள்ளங்கரடு வரை தார்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல்நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா தார்சாலை அமைப்பதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4.60 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். தார்சாலை அமைக்கும் பணியை சத்தி நகராட்சித்தலைவர் ஓ.எம்.சுப்ரமணியம் தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில், நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி, பொறியாளர் கணேசன், முன்னாள் நகராட்சித்தலைவர் எஸ்.ஆர்.வேலுச்சாமி, கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், ஈஸ்வரன், முன்னாள் கவுன்சிலர் ஜோசப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.