தினத்தந்தி 08.05.2013
சேலம் சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட 24 இடங்களில் ரூ.4½ கோடி செலவில் பிளாஸ்டிக் தார்சாலை மேயர் சவுண்டப்பன் தொடங்கி வைத்தார்
சேலம் சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட 24 இடங்களில் ரூ.4 கோடியே 7 லட்சத்து 65 ஆயிரம் செலவில் பிளாஸ்டிக் தார்சாலை அமைக்கும் பணியினை மேயர் சவுண்டப்பன் தொடங்கி வைத்தார்.
பிளாஸ்டிக் தார்சாலை
சேலம் சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட 1,2,3,18,19,24 மற்றும் 25 ஆகிய வார்டுகளில் 24 இடங்களில் தமிழ்நாடு நகர்புற சாலை உட்கட்டமைப்பு திட்டம் 2012–13–ன் கீழ் ரூ.4 கோடியே 7 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தார் சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை 7.726 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படுகிறது.
இந்த தார்சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நேற்று சூரமங்கலம் டாக்டர்ஸ் காலனியில் நடந்தது. இதில் மாநகராட்சி மேயர் சவுண்டப்பன் கலந்து கொண்டு பிளாஸ்டிக் தார்சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
24 இடங்களில்
இதைத்தொடர்ந்து சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட ஈ.பி. காலனி, ராசிநகர், பாவாயாம்மாள் நகர், கண்ணகி தெரு, நேரு தெரு, கம்பர் தெரு, வசந்தம் தெரு உள்பட 24 இடங்களில் தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் அசோகன், துணை மேயர் நடேசன், செயற்பொறியாளர்கள் அசோகன், காமராஜ், மண்டலக்குழு தலைவர்கள் தியாகராஜன், மாதேஸ்வரன் உளபட பலர் கலந்து கொண்டனர்.
சேலம் சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட 24 இடங்களில் ரூ.4½ கோடி செலவில் பிளாஸ்டிக் தார்சாலை மேயர் சவுண்டப்பன் தொடங்கி வைத்தார்
சேலம் சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட 24 இடங்களில் ரூ.4 கோடியே 7 லட்சத்து 65 ஆயிரம் செலவில் பிளாஸ்டிக் தார்சாலை அமைக்கும் பணியினை மேயர் சவுண்டப்பன் தொடங்கி வைத்தார்.
பிளாஸ்டிக் தார்சாலை
சேலம் சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட 1,2,3,18,19,24 மற்றும் 25 ஆகிய வார்டுகளில் 24 இடங்களில் தமிழ்நாடு நகர்புற சாலை உட்கட்டமைப்பு திட்டம் 2012–13–ன் கீழ் ரூ.4 கோடியே 7 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தார் சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை 7.726 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படுகிறது.
இந்த தார்சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நேற்று சூரமங்கலம் டாக்டர்ஸ் காலனியில் நடந்தது. இதில் மாநகராட்சி மேயர் சவுண்டப்பன் கலந்து கொண்டு பிளாஸ்டிக் தார்சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
24 இடங்களில்
இதைத்தொடர்ந்து சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட ஈ.பி. காலனி, ராசிநகர், பாவாயாம்மாள் நகர், கண்ணகி தெரு, நேரு தெரு, கம்பர் தெரு, வசந்தம் தெரு உள்பட 24 இடங்களில் தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் அசோகன், துணை மேயர் நடேசன், செயற்பொறியாளர்கள் அசோகன், காமராஜ், மண்டலக்குழு தலைவர்கள் தியாகராஜன், மாதேஸ்வரன் உளபட பலர் கலந்து கொண்டனர்.