Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலைப் பணி தொடக்கம்

Print PDF

தினமணி             02.07.2013

சாலைப் பணி தொடக்கம்

அரவக்குறிச்சி பேரூராட்சியில் ரூ. 37 லட்சத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பேரூராட்சி கரடிப்பட்டியில் இருந்து ராஜபுரம் சாலை வரை தமிழ்நாடு நகர்ப்புற சாலை மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 37 லட்சத்தில் 1.6 கி.மீ. தொலைவுக்கு தார்ச் சாலை அமைக்கும் பணியை  பேரூராட்சித் தலைவர் என். மணிகண்டன் தொடக்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி தொகுதிச் செயலர் எஸ்.பி. லோகநாதன், பேரூராட்சி துணைத் தலைவர் எஸ். சிவசெல்வி, பேரூராட்சி உறுப்பினர்கள் எம்ஜிஆர் மனோகரன், செந்தில், ஜோதி, கிளைச் செயலர்கள் நீலகண்டன், கோவிந்தசாமி, ரங்கராஜ் மற்றும் ஊர் நாயக்கர் முருகையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.