தினமலர் 06.08.2013
தரமணி சாலைகளுக்கு ரூ.2.79 கோடியில் மதிப்பீடு
சென்னை: தரமணி சி.பி.டி., வளாகத்தில், மோசமாக உள்ள சாலைகளை சீரமைக்க, மாநகராட்சி 2.79 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரித்து உள்ளது.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் தரமணி சி.பி.டி., வளாக நான்காவது சாலை குண்டும், குழியுமாக உள்ள நிலையில், அதற்கு அடுத்த மூன்றாவது சாலை மட்டும், ஜனாதிபதி வருகையையொட்டி, இரவோடு இரவாக சீரமைக்கப்பட்டது.
இதனால், அந்த மக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும், ஜனாதிபதியிடம் முறையிட போவதாகவும், ‘தினமலர்’ நாளிதழில் நேற்று படத்துடன் கூடிய விரிவான செய்தி ெவளியானது. பணிகள் துவங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் வெளியிட்ட அறிவிப்பு:
சி.பி.டி., வளாகத்தில் உள்ள அனைத்து சாலைகளும், தொழில்நுட்ப கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வளாகத்தினுள், 1 முதல், 4 குறுக்கு சாலைகளும், இரண்டாவது பிரதான சாலையும் உள்ளன. இங்குள்ள மூன்றாவது குறுக்கு சாலை, ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, தொழில்நுட்ப கல்வித்துறை கமிஷனர் கோரிக்கைக்கு ஏற்ப, மாநகராட்சியால் புதுப்பிக்கப்பட்டது.
இதர சாலைகளையும் புதுப்பிக்க தொழில்நுட்ப கல்வித்துறை கமிஷனர் இன்று (நேற்று) மாநகராட்சிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் அடிப்படையில் அனைத்து சாலைகளையும் புதுப்பிக்க, 2.79 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. ஜனாதிபதி வருகை பாதுகாப்பு நடவடிக்கைகள் முடிந்த பின், இதர சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமணி சாலைகளுக்கு ரூ.2.79 கோடியில் மதிப்பீடு
சென்னை: தரமணி சி.பி.டி., வளாகத்தில், மோசமாக உள்ள சாலைகளை சீரமைக்க, மாநகராட்சி 2.79 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரித்து உள்ளது.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் தரமணி சி.பி.டி., வளாக நான்காவது சாலை குண்டும், குழியுமாக உள்ள நிலையில், அதற்கு அடுத்த மூன்றாவது சாலை மட்டும், ஜனாதிபதி வருகையையொட்டி, இரவோடு இரவாக சீரமைக்கப்பட்டது.
இதனால், அந்த மக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும், ஜனாதிபதியிடம் முறையிட போவதாகவும், ‘தினமலர்’ நாளிதழில் நேற்று படத்துடன் கூடிய விரிவான செய்தி ெவளியானது. பணிகள் துவங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் வெளியிட்ட அறிவிப்பு:
சி.பி.டி., வளாகத்தில் உள்ள அனைத்து சாலைகளும், தொழில்நுட்ப கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வளாகத்தினுள், 1 முதல், 4 குறுக்கு சாலைகளும், இரண்டாவது பிரதான சாலையும் உள்ளன. இங்குள்ள மூன்றாவது குறுக்கு சாலை, ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, தொழில்நுட்ப கல்வித்துறை கமிஷனர் கோரிக்கைக்கு ஏற்ப, மாநகராட்சியால் புதுப்பிக்கப்பட்டது.
இதர சாலைகளையும் புதுப்பிக்க தொழில்நுட்ப கல்வித்துறை கமிஷனர் இன்று (நேற்று) மாநகராட்சிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் அடிப்படையில் அனைத்து சாலைகளையும் புதுப்பிக்க, 2.79 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. ஜனாதிபதி வருகை பாதுகாப்பு நடவடிக்கைகள் முடிந்த பின், இதர சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.