தினமணி 21.08.2013
சிதம்பரம் பஸ் நிலையம் அருகே சாலைப் பள்ளங்கள் சீரமைக்கப்பட்டன.
- சிதம்பரம் பஸ் நிலையம் பகுதியில் காந்திசிலை அருகே உள்ள சாலைகள் முறையாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருந்தன.
- இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. மேலும் மழைக்காலங்களில் இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
- இது குறித்து ஆகஸ்ட் 17-ம் தேதியிட்ட "தினமணி' நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியாகியிருந்தது.
- இதையடுத்து
உடனடியாக சிதம்பரம் பஸ் நிலையம், காந்திசிலை, காமராஜர் அரசு மருத்துவமனை,
ரயில்வே மேம்பாலம் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டன. மேலும்
அங்கு தார்ச்சாலைகளும் போடப்பட்டன.