தினமலர் 04.10.2013
ரூ.2.40 கோடியில் தார்சாலை திட்டப்பணி துவக்கம்
சேலம்: சேலம் மாநகராட்சி, அம்மாபேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட, வார்டு, 11ல் உள்ள வாசக சாலை குறுக்குத்தெருவில், தார்சாலை அமைக்கும் பணியை, மேயர் சவுண்டப்பன் துவக்கி வைத்தார்.
நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் மூலம், வார்டு, 9ல், செங்கல் அணை சாலை, 30 லட்சம் ரூபாயிலும், வார்டு 10ல், 28 லட்சம் ரூபாய் மதிப்பிலும், வாசக சாலை தெருவில், 18.50 லட்சம் ரூபாயிலும், வார்டு 33ல், லட்சுமி நகரில், 29 லட்சம் ரூபாயிலும், நாராயணநகர், சீனிவாச நகர், கடம்பூர் முனியப்பன் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களிலும், மொத்தம் 10 சாலைகள், 3.91 கி.மீ., தூரத்துக்கு, 2.40 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது.
கமிஷனர் அசோகன், துணை மேயர் நடேசன், மண்டல தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.