Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சடயன்குழி சாலையில் கருந்தளம் அமைக்கும் பணி தொடக்கம்

Print PDF

தினமணி 23.11.2009

சடயன்குழி சாலையில் கருந்தளம் அமைக்கும் பணி தொடக்கம்

கருங்கல், நவ. 22: கிள்ளியூர் பேரூராட்சிக்கு உள்பட்ட சடயன்குழி சாலையில் கருந்தளம் அமைக்கும் பணியை கிள்ளியூர் எம்எல்ஏ ஜான்ஜேக்கப் தொடக்கிவைத்தார்.

கிள்ளியூர் பேரூராட்சிக்கு உள்பட்ட சடயன்குழி பிடாரி குளம் சாலை நீண்ட காலமாக பராமரிப்பின்றி, போக்குவரத்துகு ஏற்றதாக இல்லாமல் இருந்தது.

எனவே, இச் சாலையைச் சீரமைக்கக் கோரி அப் பகுதி மக்கள் கிள்ளியூர் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 3 லட்சத்தில் பிடாரி குளம் சாலையில் கருந்தளம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து, அப் பணியை அவர் தொடக்கிவைத்தார்.

நிகழ்ச்சியில், கிள்ளியூர் பேரூராட்சி கவுன்சிலர் சத்தியதாஸ், பாலப்பள்ளம் பேரூராட்சி கவுன்சிலர் பால்ராஜ், முன்னாள் கவுன்சிலர் பரமானந்த ஞானதாஸ், தாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 23 November 2009 06:50