தினமணி 30.11.2009
அருப்புக்கோட்டையில் ரூ.1 . 28 கோடியில் சாலை அமைக்கும் பணி: அமைச்சர் தகவல்
அருப்புக்கோட்டை நவ, 29: அருப்புக்கோட்டை பகுதியில் ரூ.1 கோடி 28 லட்சம் மதிப்பீட்டில் சாலை போடும் பணியை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கிவைத்துப் பேசினார்.
அருப்புக்கோட்டை நாடார் மேல ரதவீதியிலிருந்து சிவன்கோயில் வரை ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி சார்பில் சாலை அமைக்கும் பணியை கைத்தறிதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசியதாவது: நெடுஞ்சாலைதுறை மூலம் விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டைவரை ரூ.8 கோடி மதிப்பீட்டில் சாலையும்,பாவடி தோப்பு முதல் எம்.எஸ்.கார்னர் வரை ரூ.2 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. மேலும் நகராட்சி மூலம் டெலிபோன் ரோடு ரூ.30 லட்ச மதிப்பீட்டி லும்,பெரிய,சின்ன பள்ளிவாசல் தெருவில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டிலும்,நேரு மைதானம் முதல் தட் சனாமூர்த்தி கோயில் வரை ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலும்,மலையரசன் கோயில் சாலையை ரூ. 20 லட்சம் மதிப்பீட்டிலும் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன எனத் தெரிவித்தார். விழாவில் ஓன்றியச் சேர்மன் சுப்பாராஜ், நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம், துணைத் தலைவர் பழனிசாமி, கவுன்சிலர்கள் மணி, மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.