தினமலர் 24.12.2009
திண்டுக்கல்லில் 46 ரோடுகள் சீரமைப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை பணி முடிந்த இடங்களில் உள்ள 46 ரோடுகள் சீரமைக்கப்பட உள்ளன. திண்டுக்கல்லில் பா தாள சாக்கடை பணி வரும் மார்ச்சுக்குள் முடிந்து விடும். பணிகள் முடிந்த பகுதியில் உள்ள 46 ரோடுகளை சீரமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது. வரும் டிச., இறுதியில் 26 ரோடுகளுக்கும், ஜனவரியில் 20 ரோடுகளுக்கும் டெண்டர் விடப் பட்டு பணிகள் உடனுக்குடன் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.