Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கல்லிடைக்குறிச்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

Print PDF

தினமணி 05.01.2010

கல்லிடைக்குறிச்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

அம்பாசமுத்திரம், ஜன. 4: கல்லிடைக்குறிச்சியில் ரூ. 8.50 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

பா. வேல்துரை எம்எல்ஏ தனதுது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கல்லிடைக்குறிச்சி பேரூராட்சிப் பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக ரூ. 8.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

இந் நிதியில் இருந்து அக்கர்சாலை பிள்ளையார் கோயில் தெரு, பகழிக்கூத்தர் கோயில் தெரு உள்ளிட்ட பகுதியில் சிமெண்ட் தளம் அமைக்கப்படுகிறது. இப் பணியை பா. வேல்துரை எம்எல்ஏ சனிக்கிழமை தொடக்கிவைத்தார்.

நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் க. இசக்கிபாண்டியன் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி அ. அப்துல்ஜப்பார், துணைத் தலைவர் வே. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத் தலைவி பா. பானுமதி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் எஸ். தங்கப்பன், த. ராமகிருஷ்ணன், பிரேமா, க. பிச்சையா, அ. அலிபாத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Last Updated on Tuesday, 05 January 2010 10:27