Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மற்றொரு சாலை சீரமைக்கும் பணி துவக்கம்

Print PDF

தினமணி 09.01.2010

மற்றொரு சாலை சீரமைக்கும் பணி துவக்கம்

அம்பாசமுத்திரம், ஜன.18: வீரவநல்லூரில் ரூ.88 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை துவக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வீரவநல்லூர் மோர் மடம் பஸ் நிறுத்தத்தில் இருந்து கொட்டாரக்குறிச்சி வரை 2.8 கி.மீ. தொலைவில் சாலை அகலப்படுத்தி சீரமைக்கப்படுகிறது. மேலும் 6 சிறிய பாலங்களும் அமைக்கப்படுகின்றன.

இப் பணியை பா. வேல்துரை எம்.எல்.ஏ. துவக்கிவைத்தார். நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் சிக்கந்தர்மீரான், உதவி பொறியாளர் பி. முருகப்பெருமாள், சு. கிருஷ்ணன், துரைராஜ், ஆ. மாரித்துரை, வி.பி.எஸ். பாண்டியன், எஸ். சொரிமுத்து, நகர்மன்ற உறுப்பினர் ஆ. முருகேசன், கிளிப்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 19 January 2010 11:14