தினமணி 22.01.2010
சிமென்ட் சாலை போடும் பணி ஆய்வு
திருத்தணி, ஜன. 21: திருத்தணியில் சிமென்ட் சாலை போடும் பணியை நகரச் செயலர் எஸ். சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். திருத்தணியில் ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் ரூ.10 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இச் சாலை அமைக்கும் பணியை திருத்தணி நகரச் செயலர் எஸ். சந்திரன் மற்றும் நகராட்சி பொறியாளர் பாண்டியன், உதவி செயற்பொறியாளர் துரைக்கண்ணு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, சிமென்ட் கலவை மற்றும் சாலையின் அளவு ஆகியவற்றை பார்வையிட்டனர். சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் முடிந்தவுடன், சாலையின் இருபுற வளைவுகளில் அறிவிப்புப் பலகைகள் அமைக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருத்தணி நகர 6-வது வார்டு வட்ட பிரதிநிதி குமரவேல் உடனிருந்தனர்.