Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

களியக்காவிளை பேரூராட்சியில் புதிய சாலை அமைப்பு

Print PDF

தினமணி 08.02.2010

களியக்காவிளை பேரூராட்சியில் புதிய சாலை அமைப்பு

களியக்காவிளை
, பிப். 7: களியக்காவிளை பேரூராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையை பேரூராட்சித் தலைவி எஸ். இந்திரா திறந்து வைத்தார்.

களியக்காவிளை பேரூராட்சி 12-வது வார்டு பகுதியில் உள்ள நேசன் சாலையில், கான்கிரீட் தளம் அமைக்க பேரூராட்சி மன்றம் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு முன் பணி முடிவடைந்தது.

இச்சாலையின் ஒரு பகுதியில் இருந்து பனங்காலை செல்லும் பாதையை அகலப்படுத்தி சாலை அமைக்கும் பணியை இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த சில நாள்களுக்கு முன் செய்தனர். இதையடுத்து, புதிதாக அமைக்கப்பட்ட சாலையை பேரூராட்சித் தலைவி எஸ். இந்திரா தொடங்கி வைத்தார்.

இதில் பேரூராட்சி வார்டு உறுப்பினர் எம்.எஸ்.. கமால் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 08 February 2010 10:13