மாலை மலர் 12.02.2010
கோவை 42-வது வார்டில் செம்மொழி மாநாடு நிதியில் தார்சாலை அமைக்கும் பணி சுகாதாரக்குழு தலைவர் நாச்சிமுத்து தொடங்கி வைத்தார்
கோவை, பிப். 12-
கோவை மாநகராட்சி 42-வது வார்டில் நாயக்கர் தோட்டம் முதல் நாடார் வீதி வரை ரூ.7 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கப்படுகிறது. உலக தமிழ் செம்மொழி மாநாட்டு நிதியில் இருந்து இந்த பணி நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இந்த சாலை ஏற்கனவே 60 அடி திட்ட சாலையாக இருந்தது. 300 மீட்டர் நீளம் இந்த சாலை அமைக் கப்படுகிறது. பணியை சுகாதாரக்குழு தலைவர் நாச்சிமுத்து தொடங்கி வைத்தார். உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நிதியில் இருந்து தொடங்கப்பட்ட முதல் பணி இதுவாகும்.
இதில் என்ஜினீயர் கணேசன், காண்டிராக்டர் அம்மாசியப்பன் மற்றும் வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.