தினமலர் 17.02.2010
மோசமான ரோடுகளை ஓராண்டுக்குள் சீரமைத்து விடுவோம்: அமைச்சர் உறுதி
காரியாபட்டி :திருச்சுழி தொகுதியில் உள்ள மோசமான ரோடுகளை ஓராண்டுக்குள் சீரமைத்து முன்மாதிரி தொகுதியாக்க அமைச்சர் தங்கம்தென்னரசு உறுதியளித் துள்ளார்.காரியாபட்டி அருகே உள்ள கம்பாளி,குண்டுகுளம், மனைவியேந்தல், துலுக்கன்குளம், தாமரைக்குளம் கிராமங்களில் அரசு இலவச "டிவி' வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 515 பேருக்கு "டிவி'வழங்கி அமைச்சர் தங்கம்தென்னரசு பேசியதாவது: காரியாபட்டி ஒன்றியத்தில் காரியாபட்டி பேரூராட்சி, ஆவியூர் மக்களுக்கு இன்னும் சில தினங்களில் "டிவி' வழங்கப்படும். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூபாய் 20 லட்சம் செலவில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து அனைத்து கிராமங்களும் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றப்பட்டு வருகிறது. திருச்சுழி தொகுதியில் உள்ள மோசமான ரோடுகள் அனைத்தும் ஒராண்டுக்குள் சீரமைக்கப்பட்டு மாநிலத்தில் முன்மாதிரி தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஒன்றிய செயலாளர்கள் சண்முகச்சாமி, பொன்னுத்தம்பி, போஸ், மாவட்ட துணை செயலாளர் போஸ், ஒன்றிய சேர்மன் சம்பத், மாநில பொதுக்குழு உறுப்பினர் கூத்தப்பெருமாள், நகர செயலாளர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.