Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலைப் பணி: ஆக்கிரமிப்புகள் இடிப்பு

Print PDF

தினமணி 17.02.2010

சாலைப் பணி: ஆக்கிரமிப்புகள் இடிப்பு

தஞ்சாவூர், பிப். 16: பட்டுக்கோட்டை நகருக்கான புறவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் புறவழிச்சாலை தொடங்கி மதுக்கூர் - முத்துக்கோட்டை சாலைகள் மற்றும் கடற்கரைச் சாலை இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

இந்தச் சாலை வழியில் அரசுப் புறம்போக்கு நிலம் சுமார் 3 ஏக்கரில் உள்ளது. இதை சில தனிநபர்கள் ஆக்கிரமித்து, சாகுபடி செய்திருந்த 65 தென்னை மரங்கள் அகற்றப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் (பொ) மு. கருணாகரன் ஆலோசனையின்படி பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் மெய்யழகன் மற்றும் அதிகாரிகள் இப்பணிகளை மேற்கொண்டனர்

Last Updated on Wednesday, 17 February 2010 09:34