தினமணி 26.02.2010
ஆரணியில் ரூ.1.65 கோடியில் சிமென்ட் சாலைகள்
ஆரணி, பிப். 25: ஆரணி நகரில் ரூ.1.65 கோடி மதிப்பில் சிமென்ட் சாலைகள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, எம்எல்ஏ ஆர்.சிவானந்தம் தலைமை வகித்தார்.
எம்ஜிஆர் சிலை அருகிலிருந்து மார்க்கெட் சாலை, சூரியகுளம் பகுதி, அம்பேத்கர் சிலை வரை நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.1.20 கோடி மதிப்பில் சிமென்ட் சாலையும், காந்தி சிலை முதல் காஜிவாடை வரை சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.45 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், வியாபாரிகள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரின் கருத்துகள் கேட்கப்பட்டன.
நெடுஞ்சாலைத் துறை இளநிலை பொறியாளர் திருநாவுக்கரசு, தொலைபேசி இளநிலை பொறியாளர் சதாசிவம், நகர்மன்றத் தலைவர் சாந்திலோகநாதன், ஆணையர் சசிகலா, துணைத் தலைவர் லட்சுமி, நகர்மன்ற உறுப்பினர்கள் முருகன், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.