தினமணி 06.03.2010
கல்லிடைக்குறிச்சியில் ரூ. 51.20 லட்சத்தில் தார்சாலை
அம்பாசமுத்திரம், மார்ச் 5: கல்லிடைக்குறிச்சியில் வியாழக்கிழமை ரூ. 51.20 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
தேசிய வங்கி நிதியுதவி திட்டத்தின் கீழ் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் அகஸ்தியர் கோயில் தெருவில் இருந்து வேம்படியம்மன் கோயில் தெரு, சந்தனமாரியம்மன் கோயில் முன்பிருந்து கோட்டைத் தெரு வரை 6- ம் சாலை, தீச்சன்பச்சேரியில் இருந்து வடக்கு புதுத் தெரு வரை ரூ. 51.20 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப் பணியை வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பா. வேல்துரை எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். பேரூராட்சி மன்றத் தலைவர் க. இசக்கிபாண்டியன் தலைமை வகித்தார். நிர்வாகஅதிகாரி அ. அப்துல்ஜப்பார், துணைத் தலைவர் வே. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பொறியாளர் எஸ். சண்முகசுந்தரம், தொழில்நுட்ப உதவியாளர் ஆர். ஜனர்தனபிரபு, பேரூராட்சி உறுப்பினர்கள் இசக்கியம்மாள், க. பிச்சையா, எஸ். தங்கப்பன், மு. சுப்பிரமணியன், த. ராமகிருஷ்ணன், அ. அலிபாத்து, கோ. தங்கவேல், பொன்மணி, மஹ்மதாள்பேகம், பிரேமா, அகஸ்தியர் கோயில் அறங்காவல்குழு தலைவர் சங்கரநாராயணன், ஸீனத்சாகுல்ஹமீது, கே. கைக்கொண்டான், எம். தெய்வநாயகம், மு. இசக்கி பங்கேற்றனர்.