தினமணி 11.03.2010
கூடலூரில் ரூ.9 லட்சம் மதிப்பில் தார்ச் சாலை: எம்.எல்.ஏ. ஆய்வு
கம்பம், மார்ச் 10: தேனி மாவட்டம் கூடலூர் விவசாய பகுதியில் ரூ.9 லட்சத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் என்.ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தார். கூடலூரில் மந்தை வாய்க்கால் முதல் பெருமாள் கோயில் வரையிலுள்ள விவசாய நிலங்களுக்குச் செல்லும் சாலையில் புதிதாக தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிக்காக கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் என்.ராமகிருஷ்ணன், கூடலூர் நகராட்சித் தலைவர் ஜெயசுதா செல்வேந்திரன் ஆகியோர் தார்ச் சாலை அமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது திமுக நகரச் செயலர் லோகன்துரை, நகராட்சிப் பொறியாளர் ஜீவசுப்பிரமணி, பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.