Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலை சீரமைப்பு பணியை கலெக்டர் துவக்கி வைத்தார்

Print PDF

தினமலர் 12.03.2010

சாலை சீரமைப்பு பணியை கலெக்டர் துவக்கி வைத்தார்

கடலூர்: பாதாள சாக்கடை திட்டப்பணியில் பழுதடைந்த கடலூர்-நெல்லிக் குப்பம் சாலையில் சீரமைப்பு பணியை கலெக் டர் சீத்தாராமன் துவக்கி வைத்தார்.கடலூரில் நெல்லிக்குப் பம் ரோட்டில் பாதாள சாக்கடை திட்ட பணியால் பழுதடைந்த சாலை சீரமைப்பு பணியை கலெக் டர் சீத்தாராமன் நேற்று துவக்கி வைத்தார்.பின்னர் கலெக்டர் சீத்தாராமன் கூறியதாவது:பாதாள சாக்கடை திட் டப்பணியில் பழுதடைந் துள்ள போடிச்செட்டித் தெரு, சஞ்சீவிநாயுடு தெரு, தேரடி தெரு, வெள் ளக்கரை-குமளங்குளம் சாலை, கடலூர்-சித்தூர் சாலைகள் 1கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படுகிறது. சீரமைப்பு பணிகள் (இன்று) நேற்று முதல் துவக்கப் பட்டுள்ளது. இப்பணிகள் வரும் மே 31ம் தேதிக்குள் முடிவடையும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் டி.ஆர்.., நடராஜன், கமிஷனர் குமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் கள், அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 12 March 2010 06:58