தினமலர் 15.04.2010
தார் சாலை பணிக்கு பூமி பூஜை
அவிநாசி : தார் சாலை அமைக்கும் பணிக்கு, அவிநாசியில் பூமி பூஜை நடந்குதது. அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு சீனிவாசபுரத்தில், ரேஷன் கடை முதல் விநாயகர் கோவில் வரை தார் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.பேரூராட்சி தலைவி புஷ்பலதா தலைமை வகித்தார். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர் சிவக்குமார், நகர தி.மு.க., முன்னாள் செயலாளர் மனோகரன், ஒப்பந்ததாரர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.பேரூராட்சி தலைவி புஷ்பலதா கூறுகையில், ''ஏழு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 0.7 கி.மீட்டருக்கு தார் ரோடு அமைக்கப்படுகிறது. இன்னும் இரு வாரத்துக்குள் பணி நிறைவடையும்,'' என்றார்.