தினமலர் 22.04.2010
பெரம்பலூர் நகராட்சி பகுதியில் ரூ.1.60 கோடியில் தார்ச்சாலை
பெரம்பலூர்:பெரம்பலூர் நகராட்சி பகுதியில் ரூ 1.60 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி துவக்கப் படவுள்ளதாக நகராட்சி தலைவர் ராஜா கூறினார்.பெரம்பலூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் ராஜா தலைமையில் நேற்று நடந்தது. துணை தலைவர் முகுந்தன், ஆணையர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் நிறைவேற்றப்படவேண் டிய பணிகள் குறித்து பேசினர். பின்னர் நகராட்சி தலைவர் ராஜா பேசுகையில், பெரம்பலூர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியால் அனைத்து பகுதிகளும் குண்டும் குழியுமாக காணப் பட்டது. இதை கருத்தில் கொண்டு 1 முதல் 5 வார்டு வரைஉள்ள பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதையடுத்து 6, 7,8,9, 10,11,12,14,15,16,17,18, 19,20,21 ஆகிய 15 வார்டு பகுதியில் உள்ள சாலைகளை ரூ 1.60 கோடி மதிப்பில் புதிய தார் சாலைகளாக அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் இன்னும் சில தினங்களில் துவக்கப்படவுள்ளது.
திருச்சி மாவட்டம், தாளக்குடி கொள்ளிடத்தில் இருந்து பைப்லைன் மூலம் வழியோரக் கிராமங்கள் மற்றும் பெரம்பலூர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு வந்து விநியோகம் செய்யப்படுவதால் பெரம்பலூர் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க தாளக்குடியிலிருந்து தனியாக பெரம்பலூர் நகராட்சிக்கு நேரடியாக பைப்லைன் அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
தெருநாய்களை பிடித்து கருத்தடை ஆபரேசன் செய்ய நகராட்சி முடிவு செய்துள்ளது என்றார்.கூட்டத்தில் கவுன்சிலர்கள் ராமச்சந்திரன், அன்புதுரை, கனகராஜ், சரவணன், கருணாநிதி, ரமேஷ் பாண்டியன், ஜெய்குமார், சுசீலா, புவனேஸ்வரி, ஈஸ்வரி, பொற்கொடி, கண்ணகி மற்றும் நகராட்சி பொறியாளர் மணிமாறன், எழுத் தர் தங்கராஜ், சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடாஜலம், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.