தினமலர் 30.04.2010
ரோடு சீரமைப்பிற்கு ரூ.7 லட்சம் ஒதுக்கீடு
கம்பம்:கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழானை முன்னிட்டு, கோயில் அமைந்துள்ள பகுதியில் ரோட்டை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் ஏழு லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. கம்பம் கவுமாரியம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியில் ரோடு போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. டிராபிக் சிக்னலில் இருந்து மாரியம்மன் கோயில் வரையிலும், காளியம்மன் கோயில், ஆடுஅடிக்கும் தொட்டியிலிருந்து கோயில் வரையில் உள்ள ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல், பூக்குழி இறங்குதல் போன்ற நேர்த்தி கடன்கள் நிறைவேற்றுவதற்கு பக்தர்களுக்கு கோயிலுக்கு வர இந்த ரோட்டையே பயன்படுத்தவேண்டியதுள்ளது. கோயில் விழா துவங்குவதை முன் னிட்டு நகராட்சி நிர்வாகம் ஏழு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் மாரியம்மன் கோயில் ரோட்டை சீரமைக்க முடிவு செய்துள்ளது