Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெடுஞ்சாலைத்துறையிடம் ரோட்டினை ஒப்படைக்க போடி கவுன்சிலர்கள் ஒப்புதல்

Print PDF

தினமலர் 04.05.2010

நெடுஞ்சாலைத்துறையிடம் ரோட்டினை ஒப்படைக்க போடி கவுன்சிலர்கள் ஒப்புதல்

போடி : போடி மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.போடி நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் தலைவர் ரதியாபானு தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சங்கர், கமிஷனர் சரவணக்குமார், பொறியாளர் குருசாமி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:

நளினி ஸ்ரீ : எனது வார்டுக்கு எம்.பி., நிதி ஒதுக்கீடு செய்து 4 மாதமாகியும் இன்னும் பணிகள் துவக்கப்படவில்லை.

பொறியாளர்: எம்.பி., நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. எம்.எல்.., நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட உள்ளது.

ஈஸ்வரி: மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது பெருமைக்குரியது. ஆனால் வார்டுகளில் துப்புரவு பணிகள் நடக்கவில்லை.

தவமணி: மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றினால் போதாது. தெருக்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில் நடவடிக்கை இருக்க வேண்டும்.

சந்திரசேகர்: நகராட்சிக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனை அகற்ற வகை யில் நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.

ஜெயராஜ்: மயானத்தில் எரிவாயு தகனமேடை பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் பணிகள் முடிவடையவில்லை.

துணைத்தலைவர்: எனது வார்டில் ரோடு பணிக்கு டெண்டர் விடப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் பணிகள் துவங்கப்படாமல் உள்ளது.

முருகன்: பஸ்ஸ்டாண்டில் தனி நபர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளார். இதனை அகற்ற வேண்டும்.

கமிஷனர்: போடி மெயின் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கலாம்.

கவுன்சிலர்கள் : நெடுஞ்சாலைத்துறையும் மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி அகற்ற முன் வர வேண்டும்.

Last Updated on Tuesday, 04 May 2010 06:26