Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

திருவொற்றியூரில் ரூ 9 கோடி செலவில் 78 சாலைகள் அமைப்பு அமைச்சர் மேயர் தொடங்கினர்

Print PDF

தினகரன்      04.09.2012

திருவொற்றியூரில் ரூ 9 கோடி செலவில் 78 சாலைகள் அமைப்பு அமைச்சர் மேயர் தொடங்கினர்

திருவொற்றியூர், : திருவொற்றியூர் மண்டல பகுதிகளில் ரூ 8.9 கோடி செலவில் 78 சாலைகளுக்கான பணியை அமைச்சர் மாதவரம் மூர்த்தி, மேயர் துரைசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
 
திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ 8.9 கோடி செலவில் 78 சாலை பணிகளுக்கான தொடக்க விழா பெரியார் நகரில் நேற்று நடந்தது. மண்டலக்குழு தலைவர் தன ரமேஷ் தலைமை வகித்தார். எம்எல்ஏ குப்பன் வரவேற்றார். அமைச்சர் மாதவரம் மூர்த்தி, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி சாலை பணியை தொடங்கி வைத்தனர்.அப்போது மேயர் பேசியதாவது: சென்னை மாநகராட்சியோடு புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளின் மேம்பாட்டுக்காக தமிழக முதல்வர் ரூ 2000 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.

அந்த வகையில் திருவொற்றியூரில் ரூ 30 கோடி செலவில் சாலை மற்றும் மழைநீர் கால்வாய் தூய்மைபடுத்தும் பணி நடக்கிறது. இப்பணி விரைவில் முடிக்கப்படும். சாலை அகலப்படுத்துதல், பாதாள சாக்கடை திட்டப்பணியும் முழுவீச்சில் நடக்கிறது.

கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு துப்புரவு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளை முழுமையாக சீரமைக்க கால அவகாசம் தேவைப்படுகிறது.
எங்கள் நிர்வாகத்தில் முறைகேடு, ஊழல் நடக்காது. விதிமீறல்கள் இல்லாமல் கட்டுமான பணி நடக்கிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும்.இவ்வாறு மேயர் பேசினார்.கவுன்சிலர்கள் எழிலரசி, சூர்யபாபு, அமுல்ராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பரமசிவம், பத்மநாபன்,  இந்திரா சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கவுன்சிலர் நாகம்மாள் நன்றி கூறினார்.
 

ஆலந்தூர் பகுதியில் ரூ. 13 கோடி செலவில் சாலைப்பணிகள்: மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்

Print PDF
மாலை மலர்    27.08.2012

ஆலந்தூர் பகுதியில் ரூ. 13 கோடி செலவில் சாலைப்பணிகள்: மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்   
  
 
சென்னை, ஆக. 27-
ஆலந்தூர் பகுதியில் ரூ. 13 கோடி செலவில் சாலைப்பணிகள்: மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்
ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள 1646 சாலைகளில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுப் பணிகளின் கீழ் 104 சாலைகள் ரூபாய் 55.31 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் 156-வது வட்டத்தில் ரூ.3.48 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது.
 
இந்த பகுதியில் 31 தார் சாலைகள் ரூ.10.32 கோடி செலவில் அமைக்கும் பணியை மேயர் சைதை துரைசாமி இன்று துவக்கி வைத்தார். பிளாஸ்டிக் சாலைகள் பின்னர் அவர் பேசியதாவது:-
 
சென்னை மாநகரின் வளர்ச்சிக்காக முதல்வர் உத்தரவுப்படி சாலைப்பணிகள், மழைநீர் வடிகால், குடிநீர், கழிவுநீர் திட்டங்களுக்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் பிளாஸ்டிக் சாலைகள், கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று 2004ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அத்திட்டம் இடையில் வந்த ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டது.
 
முதல்வர் உத்தரவுப்படி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. 1100 உட்புற சாலைகள் ரூ.115 கோடி மதிப்பீட்டில் பிளாஸ்டிக் தார்ச்சாலை களாக மழைக்காலம் துவங்கும் முன்பே மாற்றப் படும். 1000-க்கு மேற்பட்ட உட்புற சாலைகள் சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் சாலைகளாக மாற்ற ஒப்பந்தம் கோரப்பட உள்ளது. மேலும் 60 பெரிய சாலைகள் உலகத்தரத்திற்கு இணையாக மாற்றப்படுகிறது.
 
அதற்கான அனைத்து பூர்வாங்க பணிகளும் நடைபெற்று வருகிறது. குப்பையில் இருந்து மின்சாரம் உரம், டீசல் மற்றும் பயன்பாட்டு பொருட்கள் தயாரிப்பது நவீன முறையில் குப்பைகள் அகற்றுவதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்டு 14 உலகளா விய நிறுவனங்கள் பங்கேற் றுள்ளன. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு இன்னும் 6 முதல் 9 மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
 
நிகழ்ச்சியில் துணை மேயர் பெஞ்சமின், மண்டல குழுத்தலைவர் வெங்கட்ராமன், மன்ற உறுப்பினர்கள் கோவிந்தராஜ், மணப்பாக்கம் பாண்டி ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

சாலை பராமரிப்பை தனியார்மயமாக்க ஒப்புதல்

Print PDF

தினமணி   20.08.2012

சாலை பராமரிப்பை தனியார்மயமாக்க ஒப்புதல்

புது தில்லி, ஆக. 19:  மாநகராட்சியிடமிருந்து அண்மையில் எடுத்துக் கொள்ளப்பட்ட சாலைகளின் பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநிலப் பொதுப் பணித் துறை அமைச்சர் ராஜ்குமார் செüகான் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாகப் பொதுப்பணித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், ""மாநகராட்சியிடமிருந்து திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்ட சாலைகள் மேம்படுத்தப்படவுள்ளன.

அவ்வாறு மேம்படுத்தப்படும் சாலைகளில் கிராமப்புறச் சாலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சாலைகள் அமைக்கிற நிறுவனத்திடமே, பராமரிப்பும் பணியும் அளிக்கலாம் என்ற  யோசனையை பரிசீலிக்கப்பட்டது.

பொதுப் பணித்துறை வசம் உள்ள பிரஸ் என்கிளேவ், மெஹரோலி - பதர்பூர் பார்டர் சாலை, சாவித்திரி சினிமா, ஷேக் சராய் பேஸ் 1, பஞ்சசீல் என்கிளேவ், மஸ்ஜித் ரோடு, கிரேட்டர் கைலாஷ் பார்ட் 2 - எம் பிளாக், ஆண்டூஸ் கஞ்ச், அகஸ்ட் கிராந்தி மார்க் ஆகிய சாலைகளின் பராமரிப்பையும் தனியாரிடம் அளிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.''

 


Page 35 of 167