Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சென்னையில் ரூ.190 கோடி செலவில் 2,189 தெரு சாலைகள் பிளாஸ்டிக்,சிமெண்ட் சாலைகளாக மாற்றப்படுகிறது

Print PDF

மாலை மலர்         03.08.2012

சென்னையில் ரூ.190 கோடி செலவில் 2,189 தெரு சாலைகள் பிளாஸ்டிக்,சிமெண்ட் சாலைகளாக மாற்றப்படுகிறது

சென்னையில் ரூ.190 கோடி செலவில்
2,189 தெரு சாலைகள் பிளாஸ்டிக்,சிமெண்ட் சாலைகளாக மாற்றப்படுகிறது

சென்னை, ஆக. 3-சென்னையில் உள்ள தெருச் சாலைகளை நீண்ட காலம் உழைக்கும் வகையில் பிளாஸ்டிக் கலந்த தார் சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகளாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 245.1 கிலோ மீட்டர் தூரம் உள்ள 1105 சாலைகள் பிளாஸ்டிக் கலந்த தார் சாலைகளாக மாற்றப்படுகிறது. இதற்காக ரூ.100.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. வருகிற 10-ந்தேதி டெண்டர் இறுதி செய்யப்படுகிறது. மண்டல வாரியாக சீரமைக்கப்படும் சாலைகள் எண்ணிக்கை வருமாறு:-

திருவொற்றியூர்-99 மணலி-58, மாதவரம்-170, தண்டையார்பேட்டை-108, ராயபுரம்-14, திரு.வி.க. நகர்-72, அம்பத்தூர்-37, தேனாம்பேட்டை-44, கோடம்பாக்கம்-81, வளசர வாக்கம்-108, ஆலந்தூர்-63, அடையாறு-117, பெருங் குடி-79, சோழிங்க நல்லூர்-55. டெண்டர் உறுதி செய்யப்பட்டதும் இன்னும் 2 வாரத்தில் இந்த பணிகள் தொடங்கி விடும்.

பருவமழை தொடங்குவதற்கு முன்பு இந்த ரோடுகளை சீரமைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் 1084 தெரு சாலைகள் சிமெண்ட் சாலைகளாக மாற்றப்பட உள்ளன. இந்த ரோடுகளில் உள்ள குடிநீர், மற்றும் தொலை தொடர்பு, கேபிள் இணைப்புகளை ரோட்டின் ஓரமாக மாற்றும் பணி முடிந்ததும் டெண்டர் விடப்படும்.

இந்த ரோடுகளுக்கு ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (செம்டம்பர்) முதல் வாரத்தில் சிமெண்ட் ரோடு போடும் பணிகளும் தொடங்கி விடும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

80 அடி ரோடு வழக்கில் மாநகராட்சி இணைகிறது!

Print PDF

தினமலர்                 03.08.2012

80 அடி ரோடு வழக்கில் மாநகராட்சி இணைகிறது!

ஈரோடு: போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, 80 அடி சாலையை அமைக்க வேண்டியுள்ளதால், உச்சநீதிமன்ற இடைக்கால தடை வழக்கில், மாவட்ட நிர்வாகத்துடன் தங்களையும் பிரதி வாதியாக இணைக்க, மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.ஈரோடு மாநகராட்சியில், உள்ளூர் திட்டக்குழுமம் பகுதி விரிவு அபிவிருத்தி திட்டம் எண்.2ல், பிரப்ரோடு மற்றும் ரயில்வே ஸ்டேஷனை இணைக்கும் வகையில், சி.எஸ்.ஐ., பள்ளி வளாகம், சிதம்பரம் காலனி, பெரியார் நகர், பெரும்பள்ளம் ஓடை, கரிமேடு மற்றும் சவானா ஹோட்டல் வளாகம் வழியாக, 80 அடி ரோடு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

மேற்படி திட்ட சாலை அமைந்துள்ள, விரிவு அபிவிருத்தி திட்டம் எண்-2, நகர் ஊரமைப்பு துணை ஆணையரால் இணக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. நகர் ஊரமைப்பு ஆணையாளரிடம் இருந்து மேற்படி திட்டத்துக்கு இறுதி ஒப்புதல் பெறும் பொருட்டு, விரிவு அபிவிருத்தி திட்ட விதிகள்-13ன் படி அறிக்கை செய்யப்பட்டது.தமிழ்நாடு அரசிதழ் எண்-27, ஈரோடு விரிவு அபிவிருத்தி திட்டம் எண்-2, தயாரிப்பது தொடர்பான மேற்படி அறிக்கையை தடைசெய்ய, சி.எஸ்.ஐ., நிர்வாகம், சென்னை உயர்நீதிமன்றத்தில், மாவட்ட கலெக்டர், உள்ளூர் திட்டக் குழுமம் உறுப்பினர் செயலர் ஆகியோரை பிரதிவாதியாக சேர்த்து, இடைக்காலை தடை உத்தரவை பெற்று, வழக்கு நடந்து வருகிறது.

நகரில் பி.எஸ்., பார்க் பகுதியில்  ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பிரப் ரோடு, ரயில்வே  ஸ்டேஷன் இடையிலான, 80 அடி  அகல் சாலை அமைக்க, அரசுக்கு சொந்தமாக இருக்கும் இடங்களையும், ஆக்கிரமிப்பு  இடங்களையும், தனியாருக்கு சொந்தமான இடங்களையும் இணைத்து, சாலை அமைத்து,  பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டி உள்ளது.

எனவே, நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ள வழக்கில், பிரதிவாதியாக, மாநகராட்சியையும் இணைத்துக்  கொள்ளவும்,   தொடர் நடவடிக்கை     மேற்கொள்ளவும் மன்றம் ஒப்புதல் அளித்தது.தவிர, 80 அடி அகல ரோடு அமைப்பது குறித்து, மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையமும் வலியுறுத்தி உள்ளத. சாலை அமைப்பத தொடர்பான பிரச்னைகளை களைந்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், 80 அடி அகல சாலை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் விரும்புகின்றனர்.

 

பெரம்பலூர் புறவழிச்சாலைக்கு இணைப்புச் சாலைகள் அமைக்க ரூ. 23 கோடி

Print PDF
தினமணி                   03.08.2012

பெரம்பலூர் புறவழிச்சாலைக்கு இணைப்புச் சாலைகள் அமைக்க ரூ. 23 கோடி


பெரம்பலூர், ஆக. 2: பெரம்பலூர் புறவழிச் சாலையை நகரத்துடன் இணைப்பதற்கான இணைப்புச் சாலைகள் அமைக்க ரூ. 23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் நகரின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த 10 காவலர்கள் மட்டுமே ஈடுபட்டு வந்தனர். தற்போது, 34 காவலர்கள் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் முழுமையாக ஈடுபட உள்ளனர். ஷேர் ஆட்டோக்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் ஆட்டோக்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நகராட்சியில் உள்ள அனைத்து தெரு விளக்குகளும் தொடர்ந்து எரிய, கண்காணிப்புப் பணியில் அலுவலர்கள் ஈடுபடுவார்கள். ரூ. 50 லட்சம் மதிப்பில் 7 இடங்களில் பொது மக்களின் பயன்பாட்டுக்காக பேருந்து நிழல் குடைகள் அமைக்கப்படும்.

போக்குவரத்தை சீரமைப்பதற்காக, சாலைகளின் இரு புறங்களிலும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் பாதிக்கப்படும் மக்களுக்கு, நகரின் அருகாமையில் உள்ள பகுதியில் அரசுத் திட்டங்கள் மூலம் இடம் ஒதுக்கி, வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.போக்குவரத்து சிக்னல்கள் சூரிய சக்தி மூலம் இயங்கும் வகையில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், சிக்னல்கள் அருகே அமைக்கப்பட்டுள்ள கேமரா மூலம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கண்காணிக்கப்பட்டு, அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். பெரம்பலூர் புறவழிச் சாலையை நகரத்துடன் இணைப்பதற்கான இணைப்புச் சாலைகள் அமைக்க, ரூ. 23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலைகள் மூலம் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து நகரச்சாலைகளை பயன்படுத்தாமல், புறவழிச்சாலைக்கு சென்று திருச்சி- சென்னை 4 வழிச்சாலையை அடைய இயலும் என்றார் அவர்.
 


Page 38 of 167