Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

டிசம்பர்18 முதல் சாலை பழுதுபார்க்கும் பணி: மாநகராட்சி ஆணையர் தகவல்

Print PDF
தினமணி           13.12.2011

டிசம்பர்18 முதல் சாலை பழுதுபார்க்கும் பணி: மாநகராட்சி ஆணையர் தகவல்


சென்னை, டிச. 12: சென்னை நகர சாலைகளை தார்க்கலவை மூலம் பழுதுபார்க்கும் பணி டிசம்பர் 18-ம் தேதி முதல் தொடங்கும் என்று மாநகராட்சி ஆணையர் டேவிதார் திங்கள்கிழமை தெரிவித்தார்.

 சென்னை நகரில் பருவ மழையின் காரணமாக 2,554 சாலைகள் சேதமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த சாலைகளில் உள்ள பள்ளங்களை கட்டட இடிபாடுகள் கொண்டு சீரமைக்கும் பணி கடந்த 10 நாள்களாக நடைபெறுகிறது. இந்தப் பணி முடிந்த பிறகு சேதமடைந்த சாலைகள் தார்க் கலவை கொண்டு செப்பனிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

 இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் டேவிதார் கூறியது: சாலை பள்ளங்களை கட்டட இடிபாடுகளால் சீரமைக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. சேதமடைந்த சாலைகளில்

 தார்க் கலவை கொண்டு பழுது பார்க்கும் பணி டிசம்பர் 18 -ம் தேதி முதல் தொடங்கும். இதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டு இறுதியும் செய்யப்பட்டுவிட்டன என்றார்.
 

10 நாட்களுக்குள் சாலைகள் சீரமைக்கப்படும்: சென்னை மாநகராட்சி

Print PDF
தினமணி        02.12.2011

10 நாட்களுக்குள் சாலைகள் சீரமைக்கப்படும்: சென்னை மாநகராட்சி


சென்னை, டிச.2: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழையால் சேதமடைந்த சாலைகளை 10 நாட்களுக்குள் சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையாளர் டபிள்யூ.சி. டேவிதார் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகரில் கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவ மழையாலும், சேவைத் துறைகளால் மேற்கொள்ளப்பட்ட சாலை வெட்டுப் பணிகளாலும், பெரும்பாலான சாலைகள் குண்டும்,குழியுமாக சாலைகள் சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி ஆணையாளர் பி.டபிள்யூ.சி. டேவிதார்  மண்டல அலுவலர்கள் மற்றும் அனைத்து துறைத்தலைவர்களுடன் ஆய்வு கூட்டம்  நடத்தினார்.

இக்கூட்டத்தில் ஆணையர் தெரிவிக்கும்போது,  சேதமடைந்துள்ள சாலைகளை சீர்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  அதன் அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகமானது பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசின் நிதிஉதவியுடன் விரிவுபடுத்தப்பட்ட சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளில் மழையின் காரணமாக சேதடைந்துள்ள சாலைகளில் ஏற்பட்டுள்ள உள்ள குழிகளில் கட்டட இடிபாடுகள், செங்கற்கள், மூலம் செப்பனிட்டு  சாலைகளை போக்குவரத்து வசதி முழு அளவில் ஏற்படுத்தும் பொருட்டு,  10 நாட்களுக்குள்  சரிசெய்ய வேண்டும் என்றார்.

  பேருந்து சாலைகளுக்கு முன்னுரிமை அளித்து, இக்குறைகளை போக்க வேண்டும். மேலும்,  புதிதாக சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள  15 மண்டல பகுதிகளில் உள்ள சாலைகளை சரி செய்ய ஒவ்வொரு மண்டலத்திற்கும் 2 லாரிகள், 2 ஜே.சி.பி. இயந்திரம், 1 ரோடு ரோலர் மற்றும் ஒரு வார்டுக்கு 10 பணியாளர்களைக் கொண்டு போர்க்கால அடிப்படையில் இரவு, பகல் பாராமல் இப்பணியினை விரைந்து முடிக்க ஆணையிட்டார்.

இக்கூட்டத்தில், அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

சிறப்புச் சாலை: தலைமைப் பொறியாளர் ஆய்வு

Print PDF

தினமணி      04.02.2011

சிறப்புச் சாலை: தலைமைப் பொறியாளர் ஆய்வு

  திருச்சி, பிப். 3: திருச்சி மாநகராட்சியில் ரூ. 25 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்புச் சாலை திட்டப் பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் ஆர். ரகுநாதன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

  கோ-அபிஷேகபுரம் கோட்டம் சக்திநகர் குறுக்குத் தெருவில் ரூ. 23.97 லட்சத்தில் 466 மீட்டர் நீளத்துக்கு தார்ச்சாலை அமைக்கும் பணி, பாபா காலனி, எடமலைப்பட்டிபுதூர் ஸ்டேட் வங்கி காலனி 1,2-வது தெருவில் ரூ. 28.33 லட்சத்தில் 1416 மீட்டர் நீளத்துக்கு தார்ச்சாலை அமைக்கும் பணி, முருகன் நகர் 1-வது தெருவில் 375 மீட்டர் நீளத்துக்கு ரூ. 12.18 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, சக்தி காலனியில் 330 மீட்டர் நீளத்துக்கு ரூ. 12.79 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை ரகுநாதன் பார்வையிட்டார்.

  தொடர்ந்து பொன்மலைக் கோட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்துப் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைவாக காலக்கெடுவுக்குள் செய்து முடிக்க அறிவுரை வழங்கினார்.

  இந்த ஆய்வின்போது, நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர்கள் ஆர். சந்திரன், எஸ். அருணாசலம், உதவிச் செயற்பொறியாளர் எஸ். நாகேஷ், என். பாலகுருநாதன், எஸ். கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Last Updated on Thursday, 03 March 2011 09:19
 


Page 40 of 167