Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சென்னையில் ரூ. 117 கோடியில் சாலை சீரமைப்பு பணி

Print PDF

தினகரன்       24.12.2010

சென்னையில் ரூ. 117 கோடியில் சாலை சீரமைப்பு பணி


சென்னை, டிச.24: சென்னையில் ரூ. 117 கோடி செலவில் சாலை சீரமைக்கப்படுகிறது. இந்த பணியை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் நேற்று ஆய்வு செய்தார்.

சென்னை மாநகராட்சி சார்பில் சாந்தோம் நெடுஞ்சாலையை புதுப்பிக்கும் பணியை மேயர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் துணை முதல்வர் கூறியதாவது: தொடர்மழையின் காரணமாக சென்னையில் பெரும்பாலான சாலைகள் பழுதடைந்துள்ளன. சுமார் 387 கி.மீ. நீளமுள்ள சாலைகள் பழுதடைந்துள்ளன. இந்த சாலைகளை சீரமைக்க சிறப்பு சாலைகள் திட்டம் 2010&2011ன் கீழ் ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 146 கி.மீ. நீளமுள்ள 266 பேருந்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் சீரமைக்க ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. ஏற்கனவே மழையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 141 கி.மீ. நீளமுள்ள சாலை ரூ. 37 கோடியில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. ஆக சென்னையில் 1320 சாலைகள் 387 கி.மீ.நீளத்திற்கு ரூ. 117 கோடி செலவில் சீரமைக்கப்படுகிறது. இந்த பணிகள் 100 நாளில் முடிக்கப்படும். இவ்வாறு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், துணை ஆணையர் (பணிகள்) தரேஷ் அகமது ஆகியோர் உடன் இருந்தனர்.

துணை முதல்வர் நேரில் ஆய்வு.


 
மழையால் பழுதடைந்த சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணி நேற்றிரவு தொடங்கியது. அதை, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அருகில் மேயர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் ஆகியோர்.
 
 

மழையால் சேதமான சாலைகள்சீரமைக்க ரூ.40 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமலர்      22.12.2010

மழையால் சேதமான சாலைகள்சீரமைக்க ரூ.40 லட்சம் ஒதுக்கீடு

ஆலந்தூர்:மழையால் சேதமடைந்த, மாநகர பஸ்கள் போக்குவரத்து மிகுந்த சாலைகளை சீரமைக்க ஆலந்தூர் நகராட்சிக்கு வெள்ள நிவாரண நிதியிலிருந்து 40 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆலந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட, மாநகர பஸ்கள் செல்லும் சாலைகள் மட்டுமின்றி இணைப்பு தெருக்கள் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் பலத்த சேதமடைந்தது.படுமோசமான சாலைகளில் வாகனங்கள் இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும்படி, பொதுமக்கள் சார்பில் ஆலந்தூர் நகராட்சி தலைவர் துரைவேலுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. பழுதான சாலைகள் குறித்து நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், 40 சாலைகள் படுமோசமாக இருந்தது தெரிந்தது.இதையடுத்து, தமிழக அரசின் வெள்ள நிவாரண நிதியிலிருந்து, மழையால் சேதமடைந்த மாநகர பஸ்கள் போக்குவரத்து மிகுந்த சாலைகளை சீரமைக்க ஆலந்தூர் நகராட்சிக்கு 40 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து, ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, விரைவில் பணிகள் துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


 

ரூ. 1 கோடியில் கான்கிரீட் சாலைப்பணி துவங்கியது

Print PDF
தினகரன்        16.12.2010

ரூ. 1 கோடியில் கான்கிரீட் சாலைப்பணி துவங்கியது

கோவை, டிச. 16: கோவை குனியமுத்தூர் நகராட்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலைப்பணி துவங்கியது.

கோவை குனியமுத்தூர் நகராட்சி 3, 4, 5, 6, 7 ஆகிய ஐந்து வார்டுகளுக்கு உட்பட்ட நிர்மல்மாதா மெட்ரிக் பள்ளிச்சாலை, சன் கார்டன், மதுரை வீரன் கோயில் தெரு, விபி சி நகர், பிரவின் கல்யாண மண்டபம் ரோடு, பெரு மாள் கோயில் வீதி, சக்தி குறுக்குத்தெரு, ஸ்ரீராம் காலனி, கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு கோடியே 50 ஆயிரம் ரூபாய் செலவில் நவீன கான்கிரீட் சாலை அமைக்கப்படுகிறது.

இதற்கான பூமி பூஜை மற்றும் பணி துவக்கவிழா நிர்மல்மாதா மெட்ரிக் பள்ளி சாலையில் நேற்று காலை நடந்தது.

நகராட்சி செயல் அலுவலர் கணேஷ்ராம் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் துளசி மணி செல்வராஜ் சாலைப்பணியை துவக்கிவைத்தார்.

நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர் கே.பி.செல்வராஜ், நகராட்சி பொறியாளர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் லோகநாதன், பொறியாளர் அமல்ராஜ், சுகாதார பிரிவு அலுவலர் சிவக்குமார், 3வது வார்டு கவுன்சிலர் சுஜாதா குனி சை செல்வம், குடியி ருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் ராஜமாணிக்கம், ராமசாமி, அண்ணாத் துரை, நடராஜன், ரவி, மணிமாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 


Page 42 of 167