தினகரன் 13.12.2010
சாலை அமைக்கும் பணி துவக்கம்
விருத்தாசலம், டிச. 13: விருத்தாசலம் நகராட்சி சார்பில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் சாலைகளை சீரமைத்தல் மற்றும் புதிய சாலைகள் அமைக்க தமிழக அரசு ரூ. 2 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கியது. நகராட்சி நிர்வாக துணை இயக்குனர் மகேஸ்வரி, நகரில் சாலைப்பணி நடைபெறவுள்ள பகுதிகளை நகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
பின்னர் நகர் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்திட்டத்தில் பெரியார் நகர் தெற்கு, வி.என்.ஆர் நகர், புதுக்குப்பம் ஆகிய பகுதிகளில் வடிகால் வசதியுடன் சாலை அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் திருவண்ணாமலை தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவர் முருகன் தொடங்கி வைத்தார். நகராட்சி பொறியாளர் ஜோதிமணி மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.