Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

114 கி.மீ. சாலைகளை ரூ. 33.5 கோடியில் சீரமைக்கத் திட்டம்

Print PDF

தினமணி              30.11.2010

114 கி.மீ. சாலைகளை ரூ. 33.5 கோடியில் சீரமைக்கத் திட்டம்

மதுரை,நவ. 29: மதுரையில் மழையால் பாதிக்கப்பட்ட 114 கிலோமீட்டர் நீளச் சாலைகள் ரூ. 33.5 கோடியில் புதுப்பிக்கும் பணி, டிசம்பர் 1-ம் தேதி தொடங்க உள்ளதாக மாநராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி கூட்ட அரங்கில், திங்கள்கிழமை சுகாதாரப் பணியாளர்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர், அவர் கூறியதாவது:

கழிவு அகற்றத் தடை விதிப்பு : பாதாளச் சாக்கடை குழிகளிலும், செப்டிக் டேங்குகளிலும் கழிவுகளை அகற்ற, மனிதர்களை இறக்கிப் பணி செய்ய உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை (நவ.29) முதல் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது.

இதனை மாநகராட்சி ஊழியர்களும், பொதுமக்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கழிவை அகற்ற ஜெட்ராடிங் மற்றும் டிசில்டிங் எந்திரங்கள் மாநகராட்சி வசம் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி இப்பணியை மேற்கொள்ள வேண்டும். முறையான கருவிகளுடன் கூடிய தனியார் வாகனங்களைப் பயன்படுத்தத் தடை இல்லை.

வீடுகள், ஓட்டல்கள்,தங்கும் விடுதிகள்,திருமண மண்டபம்,தொழிற்சாலைகள் என செப்டிக் டேங்க் உள்ள அனைத்து இடங்களுக்கும் இது பொருந்தும். இதனை மீறி மனிதர்களை பயன்படுத்துவது தெரியவந்தால், காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அலுவலக ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதாளச் சாக்கடை குழி இடிந்து விடுவது, மூடி உடைந்து விழுந்து விடுவது, பாதாளச் சாக்கடையில் புதிதாக இணைப்பு தருவது,பம்பிங் ஸ்டேஷன் மோட்டார் பழுது நீக்கம் போன்ற சில வேலைகளுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு உள்ளது.

இவற்றிலும், உள்ளே கழிவுநீரை அறவே அகற்றிய பிறகே பாதுகாப்புக் கவசம் அணிந்து மனிதர்கள் இறங்கி வேலை செய்ய வேண்டும். கழிவு நீர் கலக்கத் தடை: மழை நீர் வடிகால்,வாய்க்கால்கள், ஆறுகளில் கழிவுநீரை கலக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் இணைப்பு இல்லாதவர்கள் அதற்கான இணைப்பு பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதற்கென செப்டிக் டேங்க் வசதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

டையாபார்ம் தொட்டி: ஓட்டல்கள்,லாட்ஜ்கள், மாடு வளர்க்கும் இடம் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றில் கழிவுநீரை வெளியேற்றும்போது, அதில் பிளாஸ்டிக் கழிவுகள்,மாட்டுச்சாணம் போன்றவை கலந்து வருவதால் கழிவுநீர் பாதையில் அடைப்பு ஏற்பட்டு விடுகிறது.

எனவே, மேற்கண்ட இடங்களில் கழிவு நீரை அகற்றுவதற்கு, டயாபார்ம் எனப்படும் தொட்டியை வடிவமைத்து அதன்மூலம் கழிவுநீரை வெளியேற்ற வேண்டும். டிசம்பர் 15-க்குள் இந்த அமைப்பை நிறுவிக் கொள்ள வேண்டும்.

சாலைகள் சீரமைப்பு: மதுரை நகரில் பழுதான நிலையில் சாலைகள் உள்ளன. வடிகால் அமைப்பு பணிகள், வைகை குடிநீர் திட்டப் பணிகள், பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இவற்றைச் சீரமைப்பதற்கு அரசு ரூ. 33.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான டென்டர் விடப்பட்டு வேலை ஆர்டர்கள் வழங்கப்பட்டு விட்டன. டிசம்பர் 1-ம் தேதி முதல் சாலை அமைப்பு பணிகள் துவங்கிவிடும்.

மொத்தம் 114 கிலோ மீட்டர் நீளம் சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன. இதில், பாதாளசாக்கடை, குடிநீர் திட்டப்பணிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு சாலைகள் போடப்படும் என்றார். வண்டியூர் கண்மாய்த் திட்டம் குறித்து, மாநகராட்சி தலைமை பொறியாளர் சக்திவேல் கூறும்போது, 58 ஏக்கர் பரப்பளவுள்ள வண்டியூர் கண்மாயில் 3 முதல் 4 மீட்டர் வரை ஆழம் உள்ளது.

அதை மேலும் ஆழப்படுத்துவதன் மூலம் கூடுதலாக 40 சதவீதம் தண்ணீர் இருப்பு வைக்க முடியும். அதில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் தீம்பார்க் உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்டம் வடிவமைக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

 

மழையினால் சேதமடைந்த 114 கிலோ மீட்டர் சாலைகள் 7 நாட்களில் சீரமைக்கப்படும் மாநகராட்சி கமிஷனர் தகவல்

Print PDF

தினகரன்         30.11.2010

மழையினால் சேதமடைந்த 114 கிலோ மீட்டர் சாலைகள் 7 நாட்களில் சீரமைக்கப்படும் மாநகராட்சி கமிஷனர் தகவல்

மதுரை, நவ. 30: மதுரையில் மழையினால் சேதம் அடைந்துள்ள 114 கிலோ மீட்டர் சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.33.50 கோடி அனுமதி அளித்து டெண்டர் விடப்பட்டுள் ளன. டிசம்பர் முதல் வாரம் இந்த சாலை அமைக்கும் பணி துவங்கும் என்று மாநகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

மதுரை மாநகரா£ட்சி ஆணையாளர் செபாஸ்டின் கூறியதாவது: பாதாள சாக்கடை தொட்டி மற்றும் வீடுகளில் உள்ள செப்டிக் டேங்குகளில் ஆட்கள் இறங்கி சுத்தம் செய்வதற்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி தடைவிதித்து அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. மாநகராட்சி எல்லைக்குள் பாதாள சாக்கடை தொட்டி மற்றும் வீடுகளில் உள்ள செப்டிக் டேங்குகளில் மாநகராட்சி பணியாளர்கள் உள்பட யாரும் இறங்க கூடாது.

வீடுகளின் உரிமையாளர்களும் வெளியாட்களை இறங்க செய்ய கூடாது. இதனை மீறினால் பணியாளர், வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை இணைப்பும் துண்டிக்கப்படும். அடைப்புகளை சுத்தம் செய்ய மாநகராட்சியில் இயந்திரங்கள் மூலம் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும்.

ஓட்டல்கள், லாட்ஜ்கள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றில் இருந்து கழிவுநீரை பாதாள சாக்கடையுடன் விடுவதற்கு பில்டர்செய்யும் அமைப்பை அந்தந்த நிறுவனங்களே ஏற்படுத்த வேண்டும். நேரடியாக பாதாள சாக்கடைக்குள் கழிவுநீரை விடக்கூடாது. பிளாஸ்டிக் கழிவுகள் பாதாள சாக்கடையை அடைத்து விடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கும் பூ மார்க்கெட்டுக்கும் இடையில் உள்ள 27 ஏக்கர் நிலத்தில் மல்டி லெவல் சிட்டி மார்க்கெட் உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சிங்கப்பூர் நிறுவனம் இதற்கான அனுமதியை கேட்டுள்ளது. இதில் ஸ்டார் ஓட்டல், தியேட்டர்கள் மற்றும் வர்த்தக மையங்கள் இருக்கும். இதன் அருகிலுள்ள வண்டியூர் கண்மாயில் நூறு ஏக்கரில் தீம் பார்க் அமைக்கவும் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. விரைவில் அரக்கு அனுப்பி வைக்கப்படும்.

மழையினால் நகரில் உள்ள ரோடுகள் அதிகளவில் சேதம் அடைந்துள்ளன. ரோடுகளை சீரமைக்க ரூ.33.50 கோடி அனுமதி அளித்து டெண்டர் விடப்பட்டுள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் சாலை அமைக்கும் பணி துவங்கும். 114 கிலோ மீட்டரில் சாலைகள் சீரமைக்கப்படும். முன்னதாக ரோடுகளில் உள்ள பள்ளங்கள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வருகின்றன.

மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே ஆம்னி பஸ்நிலையம் அமைக்கவும், லாரி நிலையம் அமைக்கவும் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தலைமை பொறியாளர் சக்திவேல், துணை ஆணையர் தர்பகராஜ் உடனிருந்தனர்.

 

ரூ.70 லட்சத்தில் சிமென்ட், தார் சாலைகள்

Print PDF

தினமணி            26.11.2010

ரூ.70 லட்சத்தில் சிமென்ட், தார் சாலைகள்

ஸ்ரீவைகுண்டம்,நவ.25: நாசரேத்தில் ரூ.70 லட்சத்தில் கான்கிரீட் சாலைகள், தார் சாலைகள் அமைப்பதென பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாசரேத் பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் தலைவர் சா.மாமல்லன் தலைமையில் நிர்வாக அதிகாரி தேவராஜ், துணைத் தலைவர் ஜமீன் சாலமோன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

நாசரேத் பேரூராட்சி 2-வது வார்டு பிரகாசபுரம் மறுகால்துறையில் இருந்து கடம்பாகுளம்வரை செல்லும் ஓடையை தூர்வாரி கழிவுநீர் ஓடையை சீரமைப்பது, சுகாதார கேடு, தொற்று நோய் பரவும் அபாயநிலை உள்ளதால் கொசுவை ஒழிக்க கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் வாங்குவது, நாசரேத் பேரூராட்சி சிறப்பு சாலைகள் திட்டம் 2010-2011 ஆம் ஆண்டின் கீழ் ரூ.70 லட்சத்தில் பெத்தானியாநகர் முதல் கந்தசாமிபுரம், திருவள்ளுவர் காலனிவரையிலும், திருமறையூர் பஸ்நிறுத்தம் முதல் ஐ.எம்.எஸ். கட்டடம் வரையிலும், ஆசீர்வாதபுரம் சன்னதி தெரு முதல் வகுத்தான்குப்பம் ரோடு வரையிலும், பிரதர்டன் தெரு முதல் பேருந்து நிலையம் சாலை வரையிலும், பிரகாசபுரம் கூட்டுறவு நகர வங்கி முதல் ஏ.டி.ஸ்ரீதரன் வீடு வரையிலும், வகுத்தான்குப்பம் மற்றும் கீழத்தெரு வரையிலும் சிமெண்ட் சாலைகள் அமைக்கவும்,

என்.டி.என்.தெரு, ஜெயபாண்டியன் தெரு முதல் வெள்ளரிக்காயூரணி தேவர் சிலை வரை தார் சாலை அமைக்கவும், 2010-2011 இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதியில் இருந்து ஆழ்வார்திருநகரி நீரேற்று நிலையம் கிணறு பழுது பார்த்து குழாய் விஸ்தரிப்பு பணியை ரூ.11 லட்சத்தில் மேற்கொள்ளவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கொம்பையா, கனியம்மாள், ராமபுஷ்பம், உத்திரக்குமார், ஜான் ஞான தாஸ், மோகன், மீனா ராஜகுமாரி, ஜெசி ஜேம்ஸ், அன்பு, கஸ்தி ஜெயபால், ஜெயராஜ், செல்வின், சந்திரன், சாராள், மத்தேயு ஜெபசிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


Page 55 of 167