Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ரூ25 கோடியில் சாலை திட்டம் பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம்

Print PDF

தினகரன்             23.11.2010

ரூ25 கோடியில் சாலை திட்டம் பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம்

திருச்சி, நவ. 23: சிறப்பு சாலை திட்டத்திற்கு பாரபட்சமாக பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி பேசினர்.

திருச்சி மாநகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந் தது. மேயர் சுஜாதா தலை மை வகித்தார். கமிஷனர் பால்சாமி, துணைமேயர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். திமுக கவுன்சிலர் அய்யல்சாமி பேசுகையில், எனது வார்டில் இருந்த சர்ச்சைக்குரிய சுவர் சில தினங்களுக்கு முன் எனக்கு தெரியாமலேயே மாநகராட்சியால் இடிக்கப்பட்டது. என்னிடம் கூறியிருந்தால் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக இடிக்க நடவடிக்கை எடுத்திருப்பேன் என்றார்.

கமிஷனர் பால்சாமி கூறுகையில், இது மேயர் எடுத்த முடிவு. பாதுகாப்பு காரணங்களுக்காக தான் அதிகமானோர் குவிக்கப்பட்டனர் என்றார்.

அதிமுக எதிர்கட்சி தலைவர் சீனிவாசன் பேசு கையில், வைகுண்ட ஏகாதசியின் போது லட்சக்கணக் கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் வந்து செல்வார்கள். மாநகராட்சிக்கு சொந்தமான இடம் இங்கு அதிக அளவில் உள்ளது.

இவற்றில் தங்கும் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கோயில் நிர்வாகம் சுகாதார பணிகளை மட்டுமே மேற்கொள்ள கேட்டுக் கொண்டுள்ளது. அதனால் அப்பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படும். தங்கு விடுதி அமைப்பது என்பது கோயில் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய பணி என்று கமிஷனர் பால்சாமி கூறினார்.

கோட்ட தலைவர் பாலமுருகன் பேசுகையில், மாநகராட்சிக்கு டிரைவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை செய்யவில்லை. இதனால் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. டிரைவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் புதிதாக நியமனம் செய்ய தமிழக அரசிடம் சிறப்பு அனுமதி பெற மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பால்சாமி கூறுகையில், பணியாளர் நியமனத்தில் பல சிரமங்கள் உள்ளன. ஏஜென்சி மூலம் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்கள் நியமனம் செய்ய வரும் 31ம் தேதி டெண்டர் நடக்கிறது என்றார். ரூ25 கோடி மதிப்பிலான சிறப்பு சாலை திட்டத்திற்கு பாரபட்சமாக பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து வார்களிலும் பணிகளை சமமாக தேர்வு செய்ய வேண்டும் என்று திமுக, அதிமுக, காங்., மதிமுக கவுன்சிலர்கள் பேசினர். திட்டத்தில் விடுபட்ட வார்டுகளுக்கு மாநகராட்சி பொது நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சிறப்பு சாலை திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பணிகள் தமிழக அரசிடம் ஏற்கனவே ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது. அதனால் இதில் திருத்தம் செய்ய இயலாது என கமிஷனர் பால்சாமி கூறினார்.

மேயர் சுஜாதா பேசுகை யில், சிறப்பு சாலை திட்டத்திற்காக ரூ.40 கோடியில் பணிகள் தேர்வு செய்யப்பட்டன. ஆனால் ரூ.25 கோ 1397904493 மட்டுமே அரசு ஒதுக்கீடு செய்தது.

மீதமுள்ள தொ கையை பெற்றுத் தருவதாக அமைச்சர் நேரு உறுதி அளித்துள்ளார். விடுபட்ட வார்டுகளிலும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு சினிமா தியேட்டர் கட்ட எதிர்ப்பு

கன்டோன்மென்ட் காவல்நிலையம் அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தில் இரு சினிமா தியேட்டர் அமைக்க அனுமதி கோரும் பொருள் மாமன்ற ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது.

இதுபற்றி காங்கிரஸ் கவுன்சிலர் ஹேமா பேசுகையில், வணிக வளாகத்திற்கு அருகே பெண்கள் ஆதிதிராவிடர் நல விடுதி உள்ளது. தியேட்டர்களில் புதிய திரைப்படங்கள் வெளிவரும் போது அதிக கூட்டம் கூடும். இது விடுதி மாணவிகள் கல்வியை பாதிப்பதோடு, பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தும். எனவே, சினிமா தியேட்டர் அமைக்க அனுமதி வழங்க கூடாது என்றார்.

தேமுதிக கவுன்சிலர் ஜெரால்டு பேசுகையில், இதுபோன்ற பொருள்களை மாமன்றம் பார்வைக்கு கொண்டு வராமல் ஆரம்ப நிலையிலேயே மறுத்துவிட வேண்டும் என்றார். இதையடுத்து இந்த பொருளை ஒத்திவைப்பதாக கமிஷனர் பால்சாமி கூறினார்.

 

விழுப்புரம் நகரில் ரூ7.50 கோடியில் சிமெண்ட்சாலைஅமைக்கும்பணி அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்

Print PDF

தினகரன்                     23.11.2010

விழுப்புரம் நகரில் ரூ7.50 கோடியில் சிமெண்ட்சாலைஅமைக்கும்பணி அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்

விழுப்புரம், நவ. 23: விழுப்புரம் நகரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார். விழுப்புரம் நகரில் ரூ.30 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வருகிறது. சாலையில் குழாய்கள் புதைக்கப்பட்டு வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக 10 வீதிகளில் இப்பணி முடிந்துள்ளது. இதைத் தொடர்ந்து ரூ.7.50 கோடி யில் சிமெண்ட் சாலை அமைக் கும் பணி பூந்தோட்டம் வீதியில் நேற்று மாலை துவங்கியது. ஆட்சியர் பழனிசாமி தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் ஜனகராஜ் முன்னிலை வகித்தார். அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்.

அப்போது அவர் கூறும்போது, விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கி வெகு விரைவில் முடிந்து இருக்கிறது. வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. நகரில் 103 வீதிகள் உள்ளன. 10 வீதிகளில் இப்பணி முழுமையாக முடிந்துவிட்டது. அந்த 10 வீதிகளில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இந்த பணி முடிவதற்குள் மற்ற 16 வீதிகளிலும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவங்கிவிடும். 103 வீதிகளுக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டு பிப்ரவரி மாதத்திற்குள் விழுப்புரம் நகரம் முழுவதும் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுவிடும். அதுவரை ஏற்படும் சங்கடங்களுக்கு வியாபாரிகளும், பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முடிக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள், சிமெண்ட் சாலை பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி 7ம் தேதி பார்வையிடுகிறார். புதிய பேருந்து நிலையம், மருத்துவமனை மாற்றம், புதுச்சேரி சாலை (தேசிய நெடுஞ்சாலை), பாதாள சாக்கடை திட்டத்துக்கு கா.குப்பத்திற்கு நீரை தேக்குவது போன்ற பணிகளை எதிர்த்தார்கள். எதற்காக எதிர்த்தார்கள் என்று தெரியவில்லை. திட்டம் ஆரம்பிக்கும்போது கசப்பாகத்தான் இருக்கும். பணிகள் நிறைவடைந்த பிறகு பாராட்டு கிடைக்கிறது.

புதுச்சேரி சாலை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வரியை உயர்த்தாத விழுப்புரம் நகராட்சிக்கு சிமெண்ட் சாலை அமைக்க ரூ.7.50 கோடியை முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வழங்கியுள்ளனர், என்றார்.

புஷ்பராஜ் எம்எல்ஏ, நகராட்சி ஆணையர் சிவக்குமார், பொறியாளர் பார்த்திபன், சிகா கல்வி அறக்கட்டளை தலைவர் விசாலாட்சி பொன்முடி, மாவட்ட திமுக பொருளாளர் புகழேந்தி, எக்ஸ்லண்ட் கட்டுமான நிறுவன நிர்வாக இயக்குனர் திருசங்கு, ஸ்டாலின் நற்பணி மன்ற செயலாளர் செல்வராஜ், நகர செயலாளர் திருப்பதி பாலாஜி, துணை செயலாளர் புருஷோத்தமன், கவுன்சிலர்கள் ஸ்ரீவினோத், ரகுபதி, சுரேஷ்பாபு, கம்பன், மகாலட்சுமி குரூப்ஸ் உரிமையாளர் ரமேஷ், முஸ்லிம் ஐக்கிய ஜமாத் நிறுவனர் அமீர்அப்பாஸ், ஊர்காவல் படை மண்டல தளபதி ஸ்ரீதர், நகர காங்கிரஸ் தலைவர் குலாம்மொய்தீன், நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் டிஆர் ரவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

வளவனூர் பேரூராட்சியில் ரூ83 லட்சத்தில் சாலை கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினகரன்           22.11.2010

வளவனூர் பேரூராட்சியில் ரூ83 லட்சத்தில் சாலை கூட்டத்தில் தீர்மானம்

விழுப்புரம், நவ. 22: வளவனூர் பேரூராட்சி மன்ற அவசர கூட்டம் நடந்தது. சேர்மன் சம்பத் தலைமை தாங்கினார். கூட்டத்தில், ரூ.42.75 லட்சம் மதிப்பில் குயவன் பிள்ளையார் கோவில் தெரு முதல் பஞ்சாயத்து போர்டு தெரு வரையும், கேஎம்ஆர் நகர், தொட்டிப்பாட்டை(கால்நடை மருத்துவமனை தெரு), அம்சா கோவில் தெரு, டிஎஸ் மணி நகர், ஆர்ஐ குடியிருப்பு, கண்ணபிரான் ஸ்டோர் ஆகிய 7 இடங்களில் சிமெண்ட் சாலை அமைக்கவும், ரூ.40.40 லட்சம் மதிப்பில் பாலாஜி நகரில் (மேற்கு பாண்டி ரோடு) சிமெண்ட் சாலையும் மற்றும் வள்ளலார் நகர், சுப்ர மணியர் நகர் ஆகிய இடங்களில் தார் சாலைகள் அமைப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. செயல் அலுவலர், துணை தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


Page 61 of 167