தினகரன் 19.11.2010
மாநகராட்சியில் 20 இடங்களில் சிறப்பு சாலை திட்டம்
கோவை, நவ.19: கோவை மாநகராட்சியில் 5.20 கோடி ரூபாய் செலவில் சிறப்பு சாலை திட்டம் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
கோவை மாநகராட்சி மன்ற அவசர கூட்டம் நேற்று நடந்தது. இதில் கோவை நகரில் 27 இடங்களில் சிமெண்ட் ரோடு, தார் தளம், நடைபாதை அமைக்க ஒப்புதல் பெறப்பட்டது. 5 கோடியே 20 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் பணிகள் நடத்த அனுமதிக்கப்பட்டது. சாஸ்திரி ரோடு, காளிதாஸ் ரோடு, சத்தியமூர்த்தி ரோடு, செங்குப்தா ரோடு, திருச்சி ரோடு, உக்கடம் பைபாஸ் ரோடு இணைப்பு பகுதி ரோடு, சென்ட் முனுசாமி ரோடு, கிருஷ்ணன் வீதி, கருப்பண்ண ரோடு, கோத்தாரி நகர், மீனா எஸ்டேட், நேதாஜி ரோடு, சுசீலா நகர் பகுதியில் தார் தளம் அமைக்கப்படும்.
காளிங்கராயன் ரோடு, பிள்ளையார் கோயில் வீதியில் சிமெண்ட் ரோடு அமைக்கப்படும். தபேதார் வீதி, வெண்ணல் நாயுடு வீதி, எல்ஜி தோட்டம், திருவள்ளுவர் நகர், கிருஷ்ணப்பா வீதி, கங்குவார் வீதி, ராமர் கோயில் வீதி முதல் கனி ராவுத்தர் வீதி, சரோஜினி வீதி, ராமலிங்க ஜோதி நகர், சி.எம்.சி காலனி, கணேஷ் லே அவுட், லட்சுமி நகர் பகுதியில் சிமெண்ட் தளமும், ராமர் கோயில் வீதி, நாகப்ப செட்டி வீதியில் நடைபாதையும் அமைக்கப்படும்.
இது தொடர்பாக அ.தி.மு.க கவுன்சில் குழு தலைவர் ராஜ்குமார் பேசுகையில், " ரோடு பணியில் வேகம் இல்லை. இப்போது துவக்கவுள்ள பணிகள் எப்போது முடியும், " என்றார். கமிஷனர் அன்சுல் மிஸ்ரா பதிலளித்து பேசுகையில், " 1 மாதத்தில் பணி முடியும். மழை பெய்தால் பணி நடத்துவதில் சிரமம் ஏற்படும், " என்றார்.