தினமணி 21.10.2010
சென்னையில் 314 சாலைகள் 7 கோடியில் சீரமைப்புசென்னை
, அக். 20: சென்னையில் 314 சாலைகள் ரூ 7 கோடி செலவில் சரிசெய்யப்பட்டு வருகின்றன என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகிலும்
, தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையிலும் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் சாலைகள் சரிசெய்யும் பணியினை மேயர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது
:சென்னையில் பழுதடைந்த சாலைகள் ஒட்டுப் பணி மூலமும்
, தேவைப்படும் இடங்களில் அகழ்ந்து எடுத்து சாலையை சீர் செய்யவும் சென்னை மாநகராட்சியால் ஆய்வு செய்யப்பட்டு, கண்டறியப்பட்டது.சென்னையில்
314 பேருந்துச் சாலைகளில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 256 சதுர மீட்டர் பரப்பளவில் சாலைகள் |11 கோடி அளவுக்குச் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.முதல்கட்டமாக ரூ
7 கோடியே 50 லட்சம் செலவில் 2 லட்சத்து 65 ஆயிரம் சதுர மீட்டர் அளவிற்கு 13 ஒப்பந்ததாரர்கள் மூலம் சாலைகளை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் 10 நாள்களில் முடிக்கப்படும்.சென்னை மாநகராட்சி மூலம் நாள்தோறும் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகள் குறித்த விவரங்கள் முதல் முறையாக இணையதளத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்படுகிறது என்றார் மா
.சுப்பிரமணியன். மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், துணை மேயர் சத்தியபாமா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.