தினமலர் 14.10.2010
பெரம்பலூர் நகராட்சி தார்சாலை பணி ஆய்வு
பெரம்பலூர்
: பெரம்பலூர் நகராட்சியில் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வரும் தார்சாலை அமைக்கும் பணியினை நகராட்சி தலைவர் ராஜா, கமிஷனர் சுரேந்திரஷா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் 23.38 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இப்பணி முடிவடைந்த 14வது வார்டு பகுதியில் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.இப்பணியினை பெரம்பலூர் நகராட்சி தலைவர் ராஜா, கமிஷனர் சுரேந்திரஷா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது நகராட்சி கவுன்சிலர் ரமேஷ்பாண்டியன், ஒப்பந்தக்காரர் ரவி உட்பட பலர் உடனிருந்தனர்.