Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

தூத்துக்குடியில் ரோடு போட ரூ. 20 கோடி அனுமதி

Print PDF

தினமலர் 11.10.2010

தூத்துக்குடியில் ரோடு போட ரூ. 20 கோடி அனுமதி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி ரோடு போடும் பணிக்கு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து திமுக பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தூத்துக்குடி மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் பெருமாள் தலைமையில் சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் நடந்தது. திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமி சிறப்புரையாற்றினார்.முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகாசெல்வி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் அருணா, இளைஞர் அணி அமைப்பாளர் ராஜ்மோகன்செல்வின், இலக்கிய அணிச் செயலாளர் திருச்சிற்றம்பலம், தலைமச் செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட பிரதிநிதி சதா, ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செந்தூர்மணி, மாடசாமி, ரவீந்திரன், முருகேசன், மெய்யழகன், சண்முகரவி, பார்த்திபன், சக்திவேல், நல்லமுத்து, பால்ராஜ், நகர செயலாளர்கள் ராமர், ஜெய்னுதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டனர்.

தமிழக முதல்வர் கருணாநிதி 87வது பிறந்த நாளை ஒட்டி இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு நிகழ்வை மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக நடத்தி வரும் கனிமொழி எம்.பி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து வேலைவாய்ப்பு முகாம் நடத்த அனுமதியளித்தற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சியில் அக்கறை கொண்டு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி மக்கள் வாழ்வில் வளம் சேர்க்க பாதாள சாக்கடை திட்ட சாலைகளில் குண்டும், குழியுமான ரோட்டை சீராக்க 20 கோடி ஒதுக்கீடு செய்ததற்கும். கோவில்பட்டி நகர மக்களின் நீண்ட நாள் குடிநீர் பிரச்னையை சீராக்கும் வகையில் இரண்டாவது பைப்லைன் திட்டத்தை நிறைவேற்ற 82 கோடி ஒதுக்கீடு செய்ததற்கும், காயல்பட்டணம் நகராட்சிக்கு இரண்டாவது குடிநீர் திட்டம் நிறைவேற்ற 36 கோடியும், சாலை வசதிக்கு 2 கோடியும் அனுமதித்த தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு மாவட்ட திமுக சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் அமைய உள்ள சட்ட மேலவைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க பட்டதாரிகள், ஆசிரியர்கள் விண்ணப்பிக்க படிவம் 18, 19 மூலம் விண்ணபிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து திமுக தலைமை உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தகுதியுடைய பட்டதாரிகள், ஆசிரியர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட நகர, ஒன்றிய நிர்வாகிகள் பிற மாவட்டத்தை மிஞ்சும் அளவிற்கு சேர்க்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

ராமநாதபுரம் நகரில் சாலைகள் சீரமைக்க ரூ.8.06 கோடி ஒதுக்கீடு நகர்மன்ற தலைவர் தகவல்

Print PDF

தினகரன் 07.10.2010

ராமநாதபுரம் நகரில் சாலைகள் சீரமைக்க ரூ.8.06 கோடி ஒதுக்கீடு நகர்மன்ற தலைவர் தகவல்

ராமநாதபுரம், அக்.7; ராமநாதபுரம் நகரில் உள்ள சாலைகளை சீரமைக்க ரூ.8.06 கோடி ஓதுக்கீடு பெறப்பட்டுள்ளதாக நகர்மன்ற தலைவர் லலிதகலா ரத்தினம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

ராமநாதபுரம் நகரில் உள்ள அனைத்து வார்டுகளும் பயன்பெறும் வகையில் ரூ.30 கோடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை நிறைவேற்ற தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.. ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்ததன் பயனாக நீண்ட கால கனவு திட்டமானது நிறைவேறும் தருவாயில் உள்ளது.

. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு குழிகள் தோண்டப்பட்டதால் சாலைகள் சேதமுற்று காணப்பட்டது. நகரில் உள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க ரூ.8.6 கோடியை தமிழக துணை முதல்வர் மு.. ஸ்டாலின் வழங்கியுள்ளார். இதற்கான பணி விரைவில் துவங்கப்பட உள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் முஜிபுர்ரகுமான் கூறுகையில், "தற்போது பாதாளசாக்கடை திட்டம் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க பொதுமக்கள் அளிக்க வேண்டிய தொகையை செலுத்திய பகுதிகளில் சாலைகள் துரிதமாக அமைக்கப்பட உள்ளது. பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு கோரி பணம் செலுத்த தாமதமாகும் நிலை ஏற்பட்டால் போடப்படும் சாலைகள் சேதம் ஏற்படும். இதனால் விரைவாக தொகையை செலுத்தி பொதுமக்கள் இணைப்புகளை பெற அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நகரில் 17.75 கி.மீ. சாலைகள் சீரமைக்க ரூ.8.06 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது இதன் மூலம் தற்போது 4 மீட்டருக்குள் உள்ள சாலைகள் அனைத்தும் சிமென்ட் சாலையாக விரைவில் அமைக்கப்படுகிறது. தற்போது மழைகாலம் முடிந்த பிறகு தார்சாலைகள் அமைக்கும் பணி விரைவாக தொடங்கப்படும்Ó என்றார்.

 

திருவொற்றியூர் நகராட்சி ஆணையர் தகவல் சாக்கடை பணி முடிந்த பகுதியில் ரூ1.5 கோடியில் சாலை சீரமைப்பு

Print PDF

தினகரன் 07.10.2010

திருவொற்றியூர் நகராட்சி ஆணையர் தகவல் சாக்கடை பணி முடிந்த பகுதியில் ரூ1.5 கோடியில் சாலை சீரமைப்பு

திருவொற்றியூர், அக்.7: திருவொற்றியூர் பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகள் முடிவடைந்த சில இடங்களில் ரூ1.5 கோடி செலவில் சாலைகள் போடப்படும் என நகராட்சி ஆணையர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

திருவொற்றியூர் நகராட்சி மேற்கு பகுதியில் 41 முதல் 48வது வரை உள்ள வார்டுகளில் 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் உள்ளன. இதில் சுமார் 35 கிலோ மீட்டர் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. பல இடங்களில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தெருவில் நடந்து செல்வோர், இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். பாதாள சாக்கடை பணி நடந்து வருவதால் சாலைகள் போட முடியாது என மறுக்கப்பட்டது.

இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் திருவொற்றியூர் நகராட்சியை பலமுறை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் கலைச்செல்வனிடம் கேட்டபோது, ‘நகராட்சி பகுதியில் ரூ176 கோடியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதனால் சாலைகள் போட முடியாத சூழ்நிலை உள்ளது. இருப்பினும் பணிகள் முடிவடைந்த சில இடங்களில் ரூ1.5 கோடி செலவில் சாலைகள் போட நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

 


Page 75 of 167