கொடுங்கையூர் பகுதிகளில் ரூ8.5 கோடியில் கால்வாய் கான்கிரீட் சாலை பணிகள்
Tuesday, 05 October 2010 05:56
administrator
நாளிதழ்௧ள் -
சாலை௧ள் மேம்பாடு
தினகரன் 05.10.2010 கொடுங்கையூர் பகுதிகளில் ரூ8.5 கோடியில் கால்வாய் கான்கிரீட் சாலை பணிகள்
சென்னை , அக். 5: கொடுங்கையூரில் ரூ8.5 கோடி செலவில் கால்வாய் சீரமைப்பு பணிகள், கான்கிரீட் சாலை பணிகள் நடந்து வருவதாக மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கொடுங்கையூரில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் விழா நேற்று நடந்தது . மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, திருவொற்றியூர் 1வது வார்டை சேர்ந்த பயனாளிகள் 11 ஆயிரத்து 450 பேருக்கு டி.வி. பெட்டிகளை வழங்கி பேசினார்.
மேயர் பேசுகையில் , "கொடுங்கையூரில் சின்னாண்டி மடம், சிறுபாலம் ரூ.20 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் திறந்து வைக்கப்படும். 20க்கும் மேற்பட்ட திறந்தவெளி நிலங்களில் ரூ50 லட்சம் செலவில் பூங்காக்கள், விளையாட்டுத்திடல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் 5 கி.மீ. நீளத்திற்கு ரூ2.47 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும், ரூ.2.88 கோடி செலவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியும், ரூ24 லட்சம் செலவில் அலுவலக கட்டிடப் பணிகளும், ரூ17 லட்சம் செலவில் கண்காணிப்பு டவர் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. ரூ2.76 கோடி செலவில் கொடுங்கையூர் கால்வாய் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது" என்றார்.
நிகழ்ச்சியில் வி .எஸ்.பாபு எம்.எல்.ஏ., துணை ஆணையர் மு.பாலாஜி, துணை மேயர் ஆர்.சத்தியபாமா, மன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், மன்ற எதிர்க்கட்சித் தலைவர் சைதை ப.ரவி, மண்டல குழுத்தலைவர் டன்லப் ரவி, முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவம் மற்றும் கவுன்சிலர்கள் ஆர்.டி.சேகர், புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சின்னக்கொடுங்கையூர் பள்ளிச் சாலை சந்திப்பில் நடந்த விழாவில் , பயனாளிகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை அமைச்சர் கே.பி.பி.சாமி வழங்குகிறார். அருகில், மேயர் மா.சுப்பிரமணியன், வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகள்.
|
பு.புகளூர் டவுன் பஞ்.,ல்ரூ.82 லட்சத்தில்புதிய சாலை பணி
Monday, 04 October 2010 08:04
administrator
நாளிதழ்௧ள் -
சாலை௧ள் மேம்பாடு
தினமலர் 04.10.2010
பு.புகளூர் டவுன் பஞ்.,ல்ரூ.82 லட்சத்தில்புதிய சாலை பணி
வேலாயுதம்பாளையம்: "புன்சை புகளூர் டவுன் பஞ்.,ல் சிறப்பு சாலை திட்டத்தில் 82 லட்சம் ரூபாயில் புதிய சாலை அமைக்கப்படுவதாக' செயல் அலுவலர் குலோத்துங்கன் கூறினார். மேலும், அவர் கூறியதாவது: மாநிலத்தில் டவுன் பஞ்சாயத்து பகுதியில் சிறப்பு சாலை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு நிலை டவுன் பஞ்சாயத்து எனும் தகுதியில் புஞ்சை புகளூருக்கு 82 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதி, நகர் விரிவாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தார் சாலை மற்றும் சிமென்ட் சாலை அமைக்கப்படும்.தார் சாலைக்கு 20 லட்சம் ரூபாய், சிமென்ட் சாலைக்கு 62 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது. சாலைப்பணி விரைவில் துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
விளாங்குடியில் 79 லட்சம் ரூபாயில் சிமென்ட் சாலை திட்ட பணிகள்
Thursday, 30 September 2010 07:55
administrator
நாளிதழ்௧ள் -
சாலை௧ள் மேம்பாடு
தினமலர் 30.09.2010
விளாங்குடியில் 79 லட்சம் ரூபாயில் சிமென்ட் சாலை திட்ட பணிகள்
விளாங்குடி : விளாங்குடி பேரூராட்சியில் 79 லட்சம் ரூபாய் செலவில் சிமென்ட் சாலை திட்டப்பணிகள் துவங்கவுள்ளது. பேரூராட்சி நிர்வாக அதிகாரி பாஷா கூறுகையில், ""விளாங்குடி நேதாஜி தெருவில் 17.25 லட்சம் ரூபாய் செலவிலும், இ.பி.காலனியில் 5.20 லட்சம் ரூபாய் செலவிலும், அசோக்நகர் 4 வது தெருவில் 19.30 லட்சம் ரூபாய் செலவிலும், அஞ்சல்நகர் மெயின்ரோடு 19.10 லட்சம் ரூபாய் செலவிலும், பாலமுருகன் கோயில் குறுக்குத்தெரு 1,2,3 வது தெருக்களில் 18.20 லட்சம் ரூபாய் செலவிலும் திட்டப்பணிகள் துவங்கவுள்ளன,'' என்றார். அப்போது பேரூராட்சி தலைவர் என்.சுந்தரராஜன் உடனிருந்தார்.
|
|
|
|
Page 79 of 167 |