Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

நெல்லை மாவட்டத்தில் சாலைகளை சீரமைக்க ரூ.69 கோடி நிதி ஒதுக்கீடு கலெக்டர் தகவல்

Print PDF

தினகரன் 30.09.2010

நெல்லை மாவட்டத்தில் சாலைகளை சீரமைக்க ரூ.69 கோடி நிதி ஒதுக்கீடு கலெக்டர் தகவல்

நெல்லை, செப். 30: நெல்லை மாவட்டத்திற்கு சிறப்பு சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.69.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயராமன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் சிறப்பு சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதில் நெல்லை மாநகரம் மற்றும் மாவட்டத்திற்கு ரூ.69.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி பகுதிக்கு ரூ.25.22 கோடியும், 7 நகராட்சிகளுக்கு ரூ.18.6 கோடியும், 36 பேரூராட்சிகளுக்கு ரூ.25.40 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு சாலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் வரும் 31.3.2011க்குள் முடியும். இயற்கை இடர்பாடுகள் மற்றும் ஐந்தாண்டுகளில் பழுதுபட்ட சாலைகள் புதிய திட்டப்பணிகள் ஆகியவை இதில் நிறைவேற்றப்படுகின்றன.

சாலைகள் மிகவும் தரம்வாய்ந்ததாக இருப்பதற்காக அதனை ஆய்வு செய்ய மூன்று குழுக் கள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது குழுவினர் சென்னையில் இருந்து வந்து ஆய்வு செய் வர்.

ரூ.5.25 கோடி செலவில் முருகன்குறிச்சியிலிருந்து கொக்கிரகுளம் பாலம் வரை சாலையை விரிவுபடுத்தி புதிய சாலை அமைக்கப் படும். வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் சர்வீஸ் ரோடு விரைவில் அமைக்கப்படும். ராமையன்பட்டியிலிருந்து கன்டியப்பேரிக்கு இணைப்புசாலை அமைக்க ரூ.4.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் டவுனில் போக்குவரத்து நெருக்கடி குறையும். இவ்வாறு அவர் கூறினார். பிஆர்ஓ ரவீந்திரன் உடனிருந்தார்.

 

ராசிபுரம் நகராட்சி பகுதிகளில் சாலைகளை சீரமைக்க ரூ2.4 கோடி ஒதுக்கீடு நகர்மன்ற தலைவர் தகவல்

Print PDF

தினகரன் 30.09.2010

ராசிபுரம் நகராட்சி பகுதிகளில் சாலைகளை சீரமைக்க ரூ2.4 கோடி ஒதுக்கீடு நகர்மன்ற தலைவர் தகவல்

ராசிபுரம், செப்.30: ராசிபுரம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரங்கசாமி, ஆணையாளர் தனலட்சுமி, பொறியாளர் பரமசிவம், மேலாளர் செல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்திற்கு தலை மற்றும் கையில் மருத்துவ கட்டுடன் வந்த 8வது வார்டு உறுப்பினர் சீனிவாசன் (அதிமுக), தலைவர் மற்றும் ஆணையாளரிடம் மனு அளித்தார். அப்போது அவர், நான் உறுப்பினராக பதவியேற்றதில் இருந்து பல்வேறு பணிகளுக்காக மனுக்களை அளித்துள்ளேன். அந்த பணிகளுக்காக டெண்டர் விடப்படுகிறது. பணிகள் துவங்கும்போது போதிய நிதி நிலை இல்லை என காரணம் கூறி நிறுத்தப்படுகிறது. இதனால் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். இதை எடுத்துரைக்கும் விதமாகவே தலை மற்றும் கையில் மருத்துவ கட்டுடன் வந்ததாக கூறினார்.

இதற்கு பதிலளித்து தலைவர் பேசுகையில், ``ராசிபுரம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் சாலைகள் அமைப்பதற்கு அரசு ரூ2 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 10 கான்கிரீட் சாலை, 37 தார்சாலை அமைக்கப்படும். விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்க உள் ளது. வார்டு வாரியாக சென்று ஆய்வு செய்து அங் குள்ள குறைகள் போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்யப்படும்`` என்றார்.

பாலு (திமுக):

ராசிபுரம் நகரில் தற்போது 10 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தண்ணீரும் குறைவாக வருகிறது. தண்ணீர் பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும்.

தலைவர்:

போதிய குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ராம்குமார் (திமுக):

ராம்நகரில் உள்ள கிணற்றில் போதிய தண்ணீர் இருந்தும் தூர்வாராமல் அசுத்தமாக உள்ளது. இதை தூர்வார வேண்டும்.

தலைவர்:

வருகிற சனிக்கிழமைக்குள் சரிசெய்யப்படும். இவ்வாறு விவாதங்கள் நடந்தன. இந்த கூட்டத்தின் முடிவில், நகராட்சி பகுதிகளில் முக்கிய இடங்களில் சாலையோரம் பிளக்ஸ்போர்டுகள் வைப்பதற்கு தடை விதிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

காட்டுமன்னார்கோவிலில் ரூ1 கோடி செலவில் சாலை பணிகள் விரைவில் துவக்கம்

Print PDF

தினகரன் 30.09.2010

காட்டுமன்னார்கோவிலில் ரூ1 கோடி செலவில் சாலை பணிகள் விரைவில் துவக்கம்

காட்டுமன்னார்கோவில், செப்.30: காட்டுமன்னார்கோவில் பேருராட்சியில் சுமார் 1 கோடி நிதியில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

காட்டுமன்னார்கோவில் பேருராட்சிக்கு உட்பட்ட 1,2,17,3,11,9,16 ஆகிய வார்டுகளில் அமைந்துள்ள டி.கே.பி, ஜெயராம், காளியம்மன் கோயில், ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, எட்டியபத்து, அண்ணா, வள்ளலார், திருவிக, எம்.ஆர்.கே, குப்புபிள்ளைசாவடி, இரட்டை தெரு ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட தெருக்கள், நகர்கள், வீதிகள் அனைத்தும் சிமெண்ட் சாலையாக மாற்றப்பட உள்ளது.

இப்பகுதியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மழை காலங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் செல்ல முடி யாத சூழல் நிலவும். மேலும் சாலைகள் அனைத்தும் மேடும் பள்ளமுமாக உள்ளதால் போக்குவரத்திற்கு பயன்படாத நிலையில் இருந்தது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகினர். வெளியூர்களில் இருந்து வரும் நபர்கள் ஆட்டோக்களில் நகருக்குள் செல்ல இயலாமல் நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இவைகள் அனைத்தும் கருத்தில் கொண்டு சாலை களை சீரமைக்க வேண்டும் என்று சுகாதார துறை அமைச்சருக்கு பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி, துணை தலைவர் மகாலட் சுமி முருகையன், செயல் அலுவலர் மகாலிங்கம் மற் றும் வார்டு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு பேருராட்சி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. துறையின் உத்தரவின்படி சிறப்பு சாலை வசதி திட்டத்தின் கீழ் 83 லட்சத்து 95 ஆயிரம் நிதியில் இப்பகுதிகளுக்குட்பட்ட 3கிமீ தூரம் சாலைகள் அனைத்தும் சிமெண்ட் சாலையாக மாற்ற உத்தரவிடப்பட்டுள் ளது. பேருராட்சி நிர்வாகம் சார்பில் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. மேலும் பேரூராட்சி சார்பில் சாலைக்கரை வீதி 71 லட்சம் நிதியில் சுகாதார துறை அமைச்சரின் நேரடி உத்தரவின் கீழ் தார் சாலை யாக மாற்றப்பட உள்ளது.

 


Page 81 of 167