தினகரன் 30.09.2010
நிலக்கோட்டை பேரூராட்சியில் சாலை சீரமைப்பு பணிக்கு ரூ.81 லட்சம் ஒதுக்கீடு
நிலக்கோட்டை, செப். 30: நிலக்கோட்டை பேரூராட்சியில் சாலை சீரமைப்பு பணிக்கு தமிழக அரசு சிறப்பு திட்டத்தில் ரூ.81 லட்சம் நிதிஒதுக்கீடு செய்துள்ளதாக பேரூராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நிலக்கோட்டை பேரூ ராட்சி கூட்டம், பேரூராட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் உதயகுமார் முன்னிலை வகித் தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம்:
துணை தலைவர் உதயகுமார்:
12வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள இடத்தை தேர்வு செய்து ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும்.
தலைவர்:
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பால்ரத்தினராஜ்:
நிலக்கோட்டை பேரூராட்சிக்கு சொந்தமான அமரர் ஊர்தி பழுதடைந்துள்ளது. அத னை சீரமைக்க வேண்டும்.
விஜயகுமார்:
11வது வார்டு பகுதியில் உப்பு தண்ணீர் குழாய் அமைக்க பலமுறை கோரிக்கை விடுத் தும் நடவடிக்கை இல்லை.
தலைவர்:
இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தங்கராஜ்:
தெருக்களில் அனைத்து பகுதிகளுக்கு சென்று துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க வேண்டும்.
தலைவர்:
அனைத்து தெருக்களிலும் இப்பணி நடந்து வருகிறது. சில இடங்களில் வண்டி செல்ல முடியாததால் குப்பைகள் அள்ளப்படாமல் இருக்கலாம். இப்பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும்.
பால்ரத்தினராஜ்:
நிலக்கோட்டையில் சாலை சீரமைக்க சிறப்பு திட்டத்தில் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது?
தலைவர்:
தமிழக அரசு நிலக்கோட்டை பேரூராட்சியில் சாலை சீரமைப்பிற்கு சிறப்பு திட்டத்தில் ரூ.81 லட்சத்து 8 ஆயிரம் ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.