Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

மேவளூர்குப்பம் & நயப்பாக்கம் சாலையை சீரமைக்க ரூ4 கோடி

Print PDF

தினகரன் 23.09.2010

மேவளூர்குப்பம் & நயப்பாக்கம் சாலையை சீரமைக்க ரூ4 கோடி

ஸ்ரீபெரும்புதூர்,செப்.23: மேவளூர்குப்பம்&நயப்பாக்கம் சாலை மற்றும் பாலங்களை சீரமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி அடுத்த மாதம் தொடங்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரி தெரிவித்துள்ளார்.

தண்டலம்&பேரம்பாக்கம் சாலையை இணைக்கும் மேவளூர்குப்பம் & நயப்பாக்கம் சாலை 10 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும், குழியுமாக இருக்கிறது. இதையடுத்து, மேவளூர்குப்பம் தரைப்பாலம் மற்றும் நயப்பாக்கம் சாலையை சீரமைக்க வேண்டும் என ஊராட்சி தலைவர் கோபால் தலைமையில் கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கோரிக்கை ஏற்று 4.4 கிலோ மீட்டர் நீளமுள்ள மேவளூர்குப்பம்&நயப்பாக்கம் சாலையை சீரமைக்க ரூ4கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரி ஞானசேகர் கூறுகையில், ‘மேவளூர்குப்பம்&நயப்பாக்கம் ஒரு வழிச்சாலையை இரு வழிச்சாலை யாக அகலப்படுத்தி சீரமைக்கவும், அங்குள்ள 2 பாலங்களை சீரமைக்கவும், மழைநீர் வடிகால்வாய் கட்டவும் ரூ4கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கும்என்றார்.

 

உடுமலையில் 100 அடி திட்ட சாலைக்காக அளவீடு பணி துவக்கம்

Print PDF

தினமலர் 23.09.2010

உடுமலையில் 100 அடி திட்ட சாலைக்காக அளவீடு பணி துவக்கம்

உடுமலை:உடுமலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க திருப்பூர், தாராபுரம் ரோடுகளை இணைக்கும் திட்ட சாலை அளவீடு பணிகள் துவங்கியுள்ளது.உடுமலை நகருக்கு வரும் வாகனங்கள் மற்றும் கோவை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தும் ஒரே வழித்தடமாக பொள்ளாச்சி-பழநி ரோட்டை பயன்படுத்த வேண்டியதுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.உடுமலை நகரில் தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, பைபாஸ் ரோடு அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால், பை பாஸ் ரோடு அமைப்பதில் இழுபறியாகி வருகிறது.

இந்நிலையில், நகராட்சி சார்பில் 100 அடி திட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, மின் வாரியத்தின் உயர் மின்னழுத்த கோபுரங்கள் இரண்டு மின் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இதற்கு இடையிலுள்ள 110 அடி இடத்தில், 100 அடி ரோடு அமைக்க நகராட்சியால் திட்டமிடப்பட்டது.ஏற்கனவே, உடுமலை பஸ் ஸ்டாண்ட் முதல் தாராபுரம் ரோடு வரை 100 அடி திட்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது.தற்போது, தாராபுரம் ரோடு முதல் திருப்பூர் ரோடு வரையுள்ள ஒரு கிலோ மீட்டர் தூரம் மற்றும் விடுபட்ட திட்ட சாலை பணிகளையும் மேற்கொள்ள நகராட்சி திட்டமிட்டுள்ளது.இதற்கான அளவீடு பணிகள் மற்றும் ரோடு அமைக்கும் இடங்கள் சுத்தம் செய்யும் பணிகள் துவங்கின. நகராட்சி தலைவர் வேலுசாமி மற்றும் அதிகாரிகள் திட்ட சாலை அமையவுள்ள பகுதிகளை ஆய்வு செய்தனர்.நகராட்சி தலைவர் கூறுகையில், "உடுமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நகராட்சி சார்பில் ஏற்கெனவே 300 மீட்டர் தூரத்திற்கு 100 அடி திட்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோடு தாராபுரம் ரோடுடன் இணைக்க சில மீட்டர் தூரம் மீதம் உள்ளது. திருப்பூர் ரோடையும் இணைக்க நிலம் எடுக்கப்பட வேண்டியுள்ளது. டவர்களுக்கு கீழ் எந்த பணிகளும் மேற்கொள்ள முடியாது. இதை கணக்கிட்டு திட்ட சாலை அமைக்கப்படுகிறது. விரைவில் ரோடு அமைக்கும் பணிகள் துவங்கும் என்றார்.

 

65 கி.மீ. சாலையை புதுப்பிக்க ரூ. 25 கோடி அரசு ஒதுக்கீடு: மேயர்

Print PDF

தினமணி 22.09.2010

65 கி.மீ. சாலையை புதுப்பிக்க ரூ. 25 கோடி அரசு ஒதுக்கீடு: மேயர்

திருநெல்வேலி,செப்.21:​ ​ திருநெல்வேலி மாநகர் பகுதியில் 65 கி.மீ. சாலையைப் புதுப்பிக்க அரசு ரூ. 25 கோடி ஒதுக்கியுள்ளதாக,​ மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக திருநெல்வேலியில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:

திருநெல்வேலி மாநகராட்சி தற்போது 868.24 கி.மீ. சாலையைப் பராமரித்து வருகிறது. இச் சாலைகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் புதிய குடிநீர்த் திட்டத்துக்காக குழாய் பதிக்கும் பணி,​ பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக குழாய் பதிக்கும் பணி,​ மழை,​ வெள்ளம் ஆகியவற்றால் பல சாலைகள் பழுதடைந்துள்ளன.

அவற்றைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இதன் விளைவாக சாலைப் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள அரசிடம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என,​ மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். அரசிடமும் வலியுறுத்தி வந்தோம்.

இந்நிலையில்,​ தமிழகத்தில் உள்ள சாலைகளைச் சீரமைக்க அரசு ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கியது. இந் நிதியில் இருந்து,​ திருநெல்வேலி மாநகராட்சி சாலைகளைச் சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என கூறினோம். இதற்காக நகரில் தற்போது மோசமாக இருக்கும் சாலைகளை ஆய்வு செய்து,​ அதைச் சீரமைக்க ஆகும் செலவு,​ காலம் போன்ற தகவல்களுடன் மாநகராட்சி உயர் அதிகாரிகள்,​ உள்ளாட்சித் துறை உயர் அதிகாரிகளை சந்தித்தனர்.

​ ​ இதையடுத்து,​ மாநகராட்சி சாலைகளைச் சீரமைக்க ரூ. 25 கோடி வழங்குவதாக அரசு ஆணை பிறப்பித்தது. ஆணையை கடந்த 18-ம் தேதி துணை முதல்வர் மு.. ஸ்டாலின் என்னிடம் தந்தார்.

​ ​ அரசு மானியமாக வழங்கியுள்ள இந் நிதியைக் கொண்டு,​ சிமென்ட்,​ தார் சாலைகள் புதிதாக அமைக்கப்படும். சாலைகள் புதுப்பிக்கும் பணி இந்த நிதியாண்டுக்குள் நிறைவடையும்.

இதேபோல,​ பாளையங்கோட்டை இலந்தகுளத்தில் தீம் பார்க் அமைக்கும் திட்டத்துக்கான பணிகள் மார்ச் மாதம் தொடங்கப்படும். மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள வ..சி. கட்டடம் விரைவில் இடிக்கப்பட்டு,​ புதிய கட்டடத்தின் தரைதளம் இந்த ஆட்சிக் காலத்துக்குள் கட்டப்படும் என்றார் அவர்.

பின்னர்,​ மாநிலத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதலிடம் பிடித்த,​ திருநெல்வேலி நகரம் கல்லணை மேல்நிலைப் பள்ளி மாணவி

ஜாஸ்மினுக்கு ரூ. 15 ஆயிரம் பரிசுத் தொகையை மேயர் வழங்கினார்.

மாநகராட்சி ஆணையர் என். சுப்பையன்,​ மண்டலத் தலைவர்கள் எஸ்.விஸ்வநாதன்,​ சுப. சீதாராமன்,​ எஸ்.எஸ். முகம்மது மைதீன்,​ உதவி ஆணையர் ​(பொறுப்பு)​ எல்.கே. பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

 


Page 86 of 167