Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

பெரம்பலூர் நகராட்சியில் தார்சாலை அமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 22.09.2010

பெரம்பலூர் நகராட்சியில் தார்சாலை அமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் தார்சாலை அமைக்க தமிழக அரசு மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை நகராட்சி தலைவர் ராஜாவிடம் துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.பெரம்பலூர் நகராட்சி பகுதியில் 23 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக பைப் லைன் அமைக்கப்பட்ட பகுதிகளில் தார்சாலை அமைக்க மத்திய அரசின் நகர்புற மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வசதி திட்டத்தின்கீழ் 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இப்பகுதிகளில் தார்சாலை அமைக்க தமிழக அரசு சிறப்பு சாலை திட்டத்தின்கீழ் மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னையில் நடந்த விழாவில் அதற்கான ஆணையை நகராட்சி தலைவர் ராஜாவிடம் துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது நகராட்சி நிர்வாக தலைமை செயலர் அசோக்வரதன்செட்டி, நகராட்சி நிர்வாக ஆணையர் செந்தில்குமார், பெரம்பலூர் நகராட்சி இன்ஜினியர் கருணாகரன், ஓவர்சீயர்கள் பாண்டு, குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

நெல்லை மாநகராட்சி ரோடுகளை சீரமைக்க ரூ.25 கோடி நிதி துணை முதல்வர் வழங்கல்

Print PDF
தினமலர்     22.09.2010

நெல்லை மாநகராட்சி ரோடுகளை சீரமைக்க ரூ.25 கோடி நிதி துணை முதல்வர் வழங்கல்

திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சியில் சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க ரூ.25 கோடி நிதி மானியமாக துணை முதல்வர் வழங்கியுள்ளதாக மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் கூறினார்.தமிழகம் முழுவதும் சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி பகுதியில் தற்போது பராமரிக்கப்பட்டு வரும் ரோடுகளின் நீளம் 868.24 கி.மீ. குடிநீர் குழாய் பதிக்கும் பணி, பாதாள சாக்கடை பணி காரணமாக அவ்வப்போது ஏற்படும் வெள்ளப் பெருக்கினாலும் ரோடுகள் சீரமைக்கப்படவேண்டியது அவசியமாக உள்ளது. மாநகராட்சியின் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் கோரிக்கை அளித்தனர். இதன் அடிப்படையில் ரோடுகளை சீரமைக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு அரசு மானியமாக வழங்கியுள்ளது. இந்த நிதியினை என்னிடம் (மேயரிடம்) தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அப்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் அசோக் வரதன் ஷெட்டி, நிர்வாக இயக்குனர் செந்தில் குமார், நெல்லை மாகராட்சி கமிஷனர் சுப்பையன் உடனிருந்தனர்.

ரோடு போடும் பணிகளை மேற்கொள்ள அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. வழிகாட்டு நெறிமுகைளுக்கு உட்பட்டு பல்வேறு பிரிவுகளாக ஒருங்கிணைக்கப்பட்டு ரோடு பணிகள் தொடங்கப்படும். பணிகள் இந்த நிதியாண்டிற்குள் முடிக்கப்படும்.பாளை., யில் தீம் பார்க் அமைக்க கன்சல்டண்ட் நியமிப்பது சம்பந்தமாக 4 இண்டர்நேஷனல் கம்பெனிகளிடம் இருந்து டெண்டர்கள் வந்துள்ளன. இதில் கன்சல்டண்டாக நியமிக்கப்படும் கம்பெனி 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும். மார்ச் மாதத்திற்குள் பணிகள் துவங்கப்படும். மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு ரூ.5 கோடியில் புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டும் பணிகள் துவங்கப்படும்.இவ்வாறு மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் கூறினார்.பேட்டியின் போது கமிஷனர் சுப்பையன், மண்டல தலைவர்கள் விஸ்வநாதன், சுப.சீத்தாராமன், முகம்மதுமைதீன், கவுன்சிலர்கள் சுப்பையாபாண்டியன், பிராங்ளின் உடனிருந்தனர்.


Last Updated on Wednesday, 22 September 2010 07:44
 

நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் சாலை பணிக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமலர்      21.09.2010

நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் சாலை பணிக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் சாலை மேம் பாட்டு பணிக்கு ஒரு கோடி ரூபாய் நிதியை சேர்மனிடம் துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.உள்ளாட்சிகளில் சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியது. இதில் நெல்லிக் குப் பம் நகராட்சிக்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது. இதற்கான நிர் வாக அனுமதி உத்தரவை சென் னையில் நடந்த நிகழ்ச்சியில் சேர்மன் கெய்க் வாட் பாபுவிடம் துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அப்போது சேர்மன் கெய்க்வாட்பாபு, நெல் லிக்குப்பம் நகராட்சி பின் தங் கிய, வருமானம் இல் லாத நகராட்சி என்பதால் கூடுதல் நிதி வேண்டும் என துணை முதல்வரிடம் மனு கொடுத்துள்ளார்.

 


Page 88 of 167