தினகரன் 20.08.2010
குமாரபாளையத்தில் ரூ1.78 கோடியில் சாலை புதுப்பிப்பு
பள்ளிபாளையம், ஆக.20: குமாரபாளையம் நகர்மன்ற அவசர கூட்டம் தலைவர் சேகர் தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் மாணிக்கவாசகம், பொறியாளர் ரவி, துணைத்தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நகராட்சி அலுவலக புதிய கட்டிடம் நாளை திறப்பு குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு ரூ42 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு குளிரூட்டப்பட்ட மன்ற கூடம் அமைக்கப்பட்டு உறுப்பினர்கள் அமர்ந்து பேச ஷோபா, டேபிள், மைக் பொருத்தப்பட்டுள்ளது. கணினி அறை, தலைவர் அறை உள்ளிட்டவைகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த புதிய அலுவலக கட்டிடத்திற்கு நாளை (சனி) திறப்பு விழா நடத்துவது, இதில் பங்கேற்க மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் காந்திசெல்வனை அழைப்பது என முடிவு செய்யப் பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் பள்ளிபாளையம், ஆக.20: குமாரபாளையம் நகர்மன்ற அவசர கூட்டம் தலைவர் சேகர் தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் மாணிக்கவாசகம், பொறியாளர் ரவி, துணைத்தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், வார்டுகளில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, தமிழக அரசின் சிறப்பு சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குமாரபாளையம் நகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை மேம்பாட்டு பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதன் முடிவில், சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனரின் கடிதத்தின்படி குமாரபாளையம் நகரில் 40 இடங்களில் சாலைகளை புதுப்பிப்பது, 9920.10 மீட்டர் தூரம் சாலை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது. இப்பணிக்கு
ரூ1 கோடியே 78 லட்சத்து 34 ஆயிரம் செலவாகும் என மதிப்பிடப்பட்டு, அத்தொகையை ஒதுக்கி தரக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் முடிவில், சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனரின் கடிதத்தின்படி குமாரபாளையம் நகரில் 40 இடங்களில் சாலைகளை புதுப்பிப்பது, 9920.10 மீட்டர் தூரம் சாலை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது. இப்பணிக்கு ரூ 1 கோடியே 78 லட்சத்து 34 ஆயிரம் செலவாகும் என மதிப்பிடப்பட்டு, அத்தொகையை ஒதுக்கி தரக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.