Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

தஞ்சை நகர சாலை மேம்பாட்டுக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு பழைய பஸ் நிலையத்தில் ரூ.80 லட்சத்தில் கான்கிரீட் தளம்

Print PDF

தினகரன் 17.08.2010

தஞ்சை நகர சாலை மேம்பாட்டுக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு பழைய பஸ் நிலையத்தில் ரூ.80 லட்சத்தில் கான்கிரீட் தளம்

தஞ்சை, ஆக. 17: தஞ்சை நகர சாலை மேம்பாட்டுக்கு ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய பஸ் நிலையத்தில் ரூ.80 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைக்கப்படுகிறது.

தஞ்சை நகர்மன்ற அவசரக்கூட்டம் நகர்மன்றத் தலைவர் தேன்மொழி ஜெயபால் தலைமையில் நேற்று நடைபெற்றது.

பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி தஞ்சை நகர வளர்ச்சிக்கு ரூ.25.19 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கிய தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி பகுதியில் சாலைகள் மேம்பாட்டு பணிக்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.60 லட்சத்தில் பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்தல், ரூ.80 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைத்தல், திருவையாறு பஸ் நிறுத்தம் பகுதியில் ரூ.50 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைத்தல், புதிய பஸ் நிலையத்தில் ரூ.30 லட்சத்தில் நவீன சுகாதார வளாகம் அமைத்தல், பெரியகோயில் முதல் மருத்துவக்கல்லூரி சாலையில் நகராட்சி எல்லை வரை மையத்தடுப்பில் ரூ.70 லட்சத்தில் தெரு விளக்குகள் அமைத்தல், பெரியகோயில், கொடிமரத்து மூலை, ஆற்றுப்பாலம் அருகில் ரூ.44 லட்சத்தில் நவீன சுகாதார வளாகம் கட்டுதல், ரூ.25 லட்சத்தில் சோழன் சிலை உள்ள பூங்காவை அழகுபடுத்துதல், ரூ.10 லட்சத்தில் நகராட்சி எல்லையில் 30 இடங்களில் பெயர்ப்பலகைகள் மற்றும் தகவல் பலகைகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சாலை மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 20 கோடியில், தஞ்சை பெரியகோயிலுக்கு வரும் பிரதான பாதைகள் மற்றும் அணுகு சாலைகளான கலைக்கல்லூரி சாலை, அருளானந்தநகர் பிரதான சாலை, எல்ஐசி காலனி பிரதான சாலை, சுந்தரம் நகர் 2ம்தெரு, வஉசி நகர் தெரு, பர்மாபஜார் தெரு, சின்னையா பாலம் தெரு, ராஜாஜி சாலை, ராஜன் சாலை, பழைய ராமேஸ்வரம் சாலைகள் ரூ.3.66 கோடியில் சீரமைக்கப்படுகின்றன.

தஞ்சை நகராட்சிப்பகுதியில் பாதாள சாக்கடை திட்ட செயலாக்கத்தால் பழுதடைந்த பழைய திருவையாறு சாலை, லட்சுமிராஜபுரம் அக்ரஹாரம் சாலை, எஸ்ஏ ஆனந்தன் நகர் பிரதான சாலை, சுங்காந்திடல் வடக்குத் தெரு, சுந்தரம்பிள்ள நகர் சாலை, வளையல்காரத்தெரு, சுண்ணாம்புக்காரத்தெரு, பரசுராம அக்ரஹாரம், ஏவி பதி நகர் சாலை, பூமால் ராவுத்தர் கோயில் தெரு, சுண்ணாம்புக்கார கால்வாய் தெரு, குயவர் தெரு, வண்டிப்பேட்டை தெரு, மேலக்காரத்தெரு, வி.பி.கோயில் நான்கு வீதிகள் (நாலுகால் மண்டபம்), ரெட்டிப்பாளையம் தெரு, ஆனந்தம் நகர் முதல் தெரு மற்றும் 2ம் தெருக்கள் உள்பட மொத்தம் 103 தெருக்களிலுள்ள சாலைகள் ரூ.13.05 கோடியில் சீரமைக்கப்படுகின்றன.

இதுதவிர, நீதிமன்ற சாலை, கிரி சாலை, மேற்கு பிரதான சாலை, ஆபிரகாம் பண்டிதர் சாலை, கீழவீதி பஜார் சாலை, எம்கேஎம் சாலை, வாடிவால் கடைத்தெரு, நடராஜபுரம் காலனி தெற்குத்தெரு, விளார் சாலை மற்றும் யாகப்பா நகர் பிரதான சாலைகளில் ரூ.10.95 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. திட்டச்செலவுகள் போக திட்டத்திற்கான மண் பரிசோதனை திட்ட விரிவான வடிவமைப்புகள் மற்றும் இதர இனங்களுக்கான செலவுகளை மேற்கொள்ள நகராட்சி ஆணையருக்கு முழு அதிகாரம் அளித்து மன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

கூட்டத்தில், வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள தனது வார்டில் ஒரு தெரு மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அது குறித்து தன்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை எனக்கூறி மதிமுக கவுன்சிலர் சங்கர் வெளிடப்பு செய்தார்.

 

மேயர் தகவல் பெங்களூர் சாலை பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைக்க முடிவு

Print PDF

தினகரன் 17.08.2010

மேயர் தகவல் பெங்களூர் சாலை பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைக்க முடிவு

பெங்களூர், ஆக.17: பெங்களூர் மாநகராட்சி நிதி நிலையில் இறுக்கம் அடைந்துள்ளதால் நகரின் சில பிரதான சாலைகளை பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைத்துவிட திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி மேயர் எஸ்.கே.நடராஜ் கூறியதாவது: பெங்களூர் மாநகராட்சி விளம்பர நிறுவனங்கள் மோசடியால் நிதி இழப்பில் உள்ளது. எனவே சில பிரதான சாலைகளை விளம்பர ஏஜென்சிகளிடம் பராமரிப்புக்கு வழங்கிவிட முடிவு செய்துள்ளோம். வருவாய் பகிர்வு மாதிரியில் விளம்பர ஏஜென்சிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள மாநகராட்சி, சில பிரதான சாலைகளின் பராமரிப்பை விளம்பர நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட முடிவு செய்துள்ளோம்.

இவர்கள் நகரத்தில் இலவசமாக விளம்பர பேனர்களை அமைத்துக்கொள்ளலாம். விளம்பர நிறுவனங்களுடன் நடந்த முதல்கட்ட ஆலோசனையில், விளம்பர ஏஜென்ஸிகள், சாலைகளை சுத்தம் செய்வார்கள், நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தத்தை பராமரிப்பார்கள்.

மேலும் பார்க்கிங் வசதிகளை கவனித்துக்கொள்ள விளம்பர நிறுவனமே வேலைக்கு ஆட்களை நியமித்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.

இந்த முடிவிற்கு நிறைய விளம்பர நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. ஆய்வுக்காக சில பிரதான இடங்களில் உள்ள சாலைகளை விளம்பர நிறுவனங்களுக்கு ஒப்படைக்க திட்டமிட்டுள்ளோம். இத்திட்டம் வெற்றிபெற்றால் நகர் முழுவதும் உள்ள சாலைகள் பராமரிக்க அனுமதி வழங்குவோம். இதனால் சட்டவிரோத விளம்பர பேனர்களால் மாநகராட்சிக்கு ஏற்படும் வருவாய் இழப்பு தவிர்க்கப்படும் என்றார்.

 

ஆக்கிரமிப்பு அகற்றம் முடிந்தது அயனாவரம் 4 வழி சாலை இம்மாத இறுதியில் திறப்பு

Print PDF

தினகரன் 17.08.2010

ஆக்கிரமிப்பு அகற்றம் முடிந்தது அயனாவரம் 4 வழி சாலை இம்மாத இறுதியில் திறப்பு

சென்னை, ஆக. 17: அயனாவரம் சாலை 4 வழிப்பாதையாக மாற்றப்பட்டு இம்மாத இறுதியில் திறக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கெல்லீசிஸ், அயனாவரம், மேடவாக்கம் குளச் சாலை ஆகிய இடங்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் அதிக அளவில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

இதனால், பயணிகளும், பொது மக்களும் குறித்த நேரத்தில் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த சாலை 15 முதல் 20 அடி அகலம் கொண்டதாக உள்ளது.

எனவே, அயனாவரம் மேடவாக்கம் சாலையிலிருந்து கீழ்ப்பாக்கம் நியு ஆவடி சாலையை இணைக்கும் இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 3 கி.மீட்டர் நீளமுள்ள இந்த சாலைய 50 அடி சாலையாக அகலப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக அயனாவரம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

அயனாவரம் சாலையில் உள்ள பெரும்பாலான ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி முடிந்துவிட்டது. கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனை காம்பவுண்ட் மற்றும் குடிநீர் வாரியம் ஆகிய இடங்களில் 50 கிரவுண்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ஸி52.24 லட்சமும், பொதுப் பணித் துறைக்கு ஸி72.39 லட்சமும் தரப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் ராஜு தெருவில் மட்டும் ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி முடியவில்லை. அந்த பணி முடிந்ததும் சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கும். இது குறித்து மேயர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, "அயனாவரம் சாலை மற்றும் ராஜராஜன் சாலை சுமார்

ஸி3 கோடி செலவில் 4 வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. மழைநீர் கால்வாய் அமைக்க ஸி1.73 கோடியும், சாலை விரிவாக்கம் செய்ய ஸி1.2 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு இம்மாத இறுதிக்குள் 4 வழிப்பாதை திறக்கப்படும்" என்றார்.

 


Page 107 of 167