Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சென்னையில் ரூ.126 கோடி செலவில் சாலைகள் சீரமைப்பு மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

மாலை மலர் 27.07.2010

சென்னையில் ரூ.126 கோடி செலவில் சாலைகள் சீரமைப்பு மாநகராட்சி நடவடிக்கை

சென்னையில்
 
 ரூ.126 கோடி செலவில் சாலைகள் சீரமைப்பு
 
 மாநகராட்சி நடவடிக்கை

சென்னை, ஜூலை. 27- சென்னை மாநகராட்சி வெளியிட்டு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி சார்பில் 10 மண்டலங்களில் சாலைகள் சீரமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. பேருந்து சாலைகளை சென்னை மாநகராட்சி பேருந்து சாலைத்துறையும், உட்புறச்சாலைகளை சீரமைக்கும் பணி துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் அறிவுரைப்படி போர்க்கால அடிப்படையில் 10 மண்டலங்களிலும் நடைபெற்று வருகிறது.

இந்த நிதியாண்டில் 2093 உட்புறச்சாலைகள் 542.26 கி.மீ. நீளத்திற்கு ரூ.101 கோடியே 87 லட்சம் செலவில் அமைக்க திட்டமிட்டு, அவற்றில் 435 உட்புறச்சாலைகள் 4.06 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு அகழ்ந்தெடுத்து, புதுப்பிக்கும் முறையில் ரூபாய் 3 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் பேருந்து சாலைகள் துறை சார்பில் 153 சாலைகள் 50 கி.மீ. நீளத்திற்கு ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் 40 மி.மீ. ஆழத்திற்கு அகழ்ந்தெடுத்து, பேவர் இயந்திரம் மூலம் புதுப்பிக்கப்படுகிறது. பழைய தார்ச்சாலை மேல் புதிய தார்ச்சாலை போடுவதால் சாலையின் மேல் மட்டம் உயர்ந்து, அருகில் உள்ள வீடுகள் பள்ளமாகி விடுவதால் மழை தண்ணீர் வீடுகளில் புக வாய்ப்பு உள்ளதால், இந்த இடர் பாட்டினை தவிர்ப்பதற்காக புதிய எந்திரம் மூலம் சாலையை அகழ்ந்தெடுத்து, புதுப்பிக்கப்படுகிறது.

புதிய அகழ்ந்தெடுக்கும் எந்திரத்தின் மூலம் சாலையை 1.3 மீட்டர் அகலத்திற்கு சுமார் 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு தினமும் அகழ்ந்தெடுக்கப்படுகிறது. இதன் மூலம் மேடு, பள்ளம் இல்லாமல் சாலைப் போக்குவரத்து இடைஞ்சலின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் நடப்பு ஆண்டில் ரூ.126 கோடி செலவில் சென்னையில் சாலைகளை சீரமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

அதில், பேருந்து சாலைத்துறை மூலம் சூரிய நாராயண சாலை, நாராயண குரு சாலை, என்.எஸ்.கே.சாலை, போஸ்டல் காலனி 3வது தெரு ஆகிய சாலைகளில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், திருவெற்றியூர் நெடுஞ்சாலை, மணலி சாலை, சிமெட்ரி சாலை, ராஜாஜி சாலை, எம்.கே.பி.நகர் மத்திய நிழற்சாலை, டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலை, டிமலஸ் சாலை, கந்தசாமி சாலை, நியூ ஆவடி சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, பாரதி சாலை, கௌடியா மடம் சாலை, எத்திராஜ் சாலை, லான்ஸ் கார்டன் சாலை, பின்னி சாலை, காமராஜர் சாலை, அசோக் நகர் 12வது நிழற்சாலை, பாரதிதாசன் காலனி பிரதான சாலை, வேளச்சேரி பிரதான சாலை போன்ற பல்வேறு பேருந்து சாலைகள் அகழ்ந்தெடுத்து, புதுப்பிக்கும் பணி மேற் கொள்ளப்பட உள்ளது. பேருந்து சாலைத்துறை சார்பில் 29 பணிகள் 10.78 கி.மீ. நீளத்திற்கு சாலை அகழ்ந்தெடுத்து, புதுப்பிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

ரூ126 கோடி செலவில் நவீன இயந்திரம் மூலம் சாலை சீரமைக்கும் பணி மாநகராட்சி தீவிரம்

Print PDF

தினகரன் 28.07.2010

ரூ126 கோடி செலவில் நவீன இயந்திரம் மூலம் சாலை சீரமைக்கும் பணி மாநகராட்சி தீவிரம்

சென்னை, ஜூலை 28: நவீன இயந்திரம் மூலம் ரூ.126 கோடியில் சாலைகளை சீரமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

பேருந்து சாலைகளை மாநகராட்சி பேருந்து சாலைகள் துறை மூலமும், உட்புறச்சாலைகளை அந்தந்த மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மூலமும் சீரமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று துணை முதல்வர் மு..ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, இந்த நிதியாண்டில் 2,093 உட்புறச்சாலைகள் 542.26 கி.மீ. நீளத்திற்கு ரூ101.87 கோடி செலவில் புதுப்பிக்கப்படவுள்ளன. இதில் 435 உட்புறச்சாலைகள் 4.06 சதுர மீட்டர் பரப்பளவிற்கு அகழ்ந்தெடுத்து புதுப்பிக்கப்படுகிறது. இதற்காக ரூ3 கோடி செலவிடப்படுகிறது. இந்த பணிகளை மண்டல அலுவலகங்கள் மேற்கொள்கிறது. பேருந்து செல்லும் 153 சாலைகள் 50 கி.மீ. நீளத்திற்கு 40 மி.மீ. ஆழத்திற்கு அகழ்ந்தெடுத்து புதுப்பிக்கப்படுகிறது. இந்த பணி ரூ.25 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது.

நடப்பு ஆண்டில் மொத்தம் ரூ126 கோடி செலவில் சென்னையில் சாலைகள் சீரமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. 29 பேருந்து சாலைகள் 10.78 கி.மீ. நீளத்திற்கு அகழ்ந்தெடுத்து புதுப்பிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் செல்லும் சாலைகளான சூரிய நாராயண சாலை, நாராயண குரு சாலை, என்.எஸ்.கே.சாலை, போஸ்டல் காலனி 3வது தெரு ஆகிய சாலைகள் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

மேலும், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மணலி சாலை, சிமெட்ரி சாலை, ராஜாஜி சாலை, எம்.கே.பி.நகர் மத்திய நிழற்சாலை, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, டிமலஸ் சாலை, கந்தசாமி சாலை, நியூ ஆவடி சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, பாரதி சாலை, கௌடியா மடம் சாலை, எத்திராஜ் சாலை, லான்ஸ் கார்டன் சாலை, பின்னிசாலை, காமராஜர் சாலை, அசோக் நகர் 12வது நிழற்சாலை, பாரதிதாசன் காலனி பிரதான சாலை, வேளச்சேரி பிரதான சாலை, பக்தவச்சலம் சாலை, லஸ் சர்ச் சாலை, ஏஜிஎஸ் காலனி 4வது பிரதான சாலை, கல்கி கிருஷ்ண மூர்த்தி சாலை போன்ற பல்வேறு பேருந்து சாலைகள் அகழ்ந்தெடுத்து புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேவர் இயந்திரம் மூலம் அகழ்ந்தெடுத்து புதுப்பிப்பு

பழைய தார்ச் சாலைகள் மேல் புதிய தார்ச்சாலைகள் போடுவதால் சாலைகளின் மேல் மட்டம் உயர்ந்து விடுகிறது. அருகில் உள்ள வீடுகள் பள்ளமாகி விடுகிறது. இதனால் மழைநீர் வீடுகளில் புகுந்துவிட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க மாநகராட்சி புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பேவர் இயந்திரம் மூலம் சாலைகளை தேவையான அளவிற்கு அகழ்ந்தெடுத்து புதுப்பிக்கப்படுகிறது. இந்த இயந்திரம் மூலம் சாலையை 1.3 மீட்டர் அகலத்திற்கு 2 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவிற்கு தினமும் அகழ்ந்தெடுக்கமுடியும். இப்படி செய்வதால் மேடு, பள்ளம் இல்லாமல் சாலைகளை சமமாக அமைக்கமுடியும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 

ராமநாதபுரம் நகராட்சியில் ரோடு பணிக்கு ரூ. 5.57 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 28.07.2010

ராமநாதபுரம் நகராட்சியில் ரோடு பணிக்கு ரூ. 5.57 கோடி ஒதுக்கீடு

ராமநாதபுரம்: ""ராமநாதபுரம் நகராட்சி ரோடு பணிகளை மேற்கொள்ள 5.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக,’’ கலெக்டர் ஹரிஹரன் கூறினார்.

மேலும்அவர் கூறியதாவது: தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் சென்னையில் நடக்கும் "இளவட்டம்' திருவிழாவையொட்டி, ராமநாதபுரம் சேதுபதி விளையாட்டு அரங்கில் இன்று 31 கல்லூரிகளிலிருந்து 5000 மாணவ மாணவிகள் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. தமிழக கல்லூரிகளில் 986 செஞ்சுருள் சங்கங்கள் துவங்கப் பட்டு வெற்றிகரமாக செயல் பட்டு வருகிறது. இளைஞர் கொண்டாட் டத்தை முன்னிட்டு புதிதாக 500 சங்கங்கள் துவங்கப்பட உள்ளன. மாவட்டத்தில் எச்..வி., பாதித்தோர் ஆண் பெண் குழந்தைகள் என 627 பேர் கூட்டுமருந்து சிகிச்சை மையம் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவு பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடங்களிலும் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகமாக உள்ளனர்.

ராமநாதபுரம் நகராட்சியில் ரோடு பணிகளை உடனடியாக மேற்கொள்ள 5.57 கோடிரூபாய் ஒதுக்கி,முதற்கட்டமாக சர்ச் முதல் சென்டர் கிளாக் , வழிவிடு முருகன் கோயில் முதல் சென்டர் கிளாக் வரை ரோடு பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குமரய்யாகோயில் ஸ்டாப் வழியாக சக்கரக்கோட்டை கண்மாய்க்கு மழைநீரை கடத்த 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பைப் பதிக்கும் பணிக்கு நிதி வழங்க அமைச்சர் தங்கவேலன் ஒப்புதல் அளித்துள்ளார்,என்றார்.

 


Page 112 of 167