Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

கிருஷ்ணகிரி நகராட்சியில் ரூ.21 லட்சத்தில் சாலை புதுப்பிக்கும் பணிகள் தொடக்கம்

Print PDF

தினமணி 22.07.2010

கிருஷ்ணகிரி நகராட்சியில் ரூ.21 லட்சத்தில் சாலை புதுப்பிக்கும் பணிகள் தொடக்கம்

கிருஷ்ணகிரி, ஜூலை 21: கிருஷ்ணகிரி நகராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிருந்து ரூ.21 லட்சம் மதிப்பிலான சாலை புதுப்பிக்கும் பணிகளை டி.செங்குட்டுவன் எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி நகராட்சியில் வார்டு எண் 5-ல் உள்ள குப்பமேடுத் தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பில் தார்சாலை புதுப்பிக்கும் பணி, பெங்காலி தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பில் தார்சாலை மற்றும் கான்கிரிட் சாலைகள் புதுப்பிக்கும் பணி, 8-வது வார்டில் நரசிம்ம சுவாமி கோயில் தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பில் தார் சாலை புதுப்பிக்கும் பணி, 10-வது வார்டு டி.பி.சாலையில் ரூ.4 லட்சம் மதிப்பில் தார் சாலை புதுப்பிக்கும் பணி மற்றும் 14-வது வார்டு பாப்பாரப்பட்டியில் உள்ள மயானத்தில் ரூ.7 லட்சம் மதிப்பில் ஈமச்சடங்கு மண்டபம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணி என ரூ.21 லட்சம் மதிப்பிலான பணிகளை கிருஷ்ணகிரி தொகுதி எம்எல்ஏ டி.செங்குட்டுவன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப், நகர்மன்ற உறுப்பினர்கள் சுமதி, மீனா, பழனி, ஆணையர் பௌலோஸ், திமுக நகரச் செயலர் நவாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

பாதாள சாக்கடை திட்ட பணியால் பாதிப்பு சாலைகளை சீர்செய்ய ரூ.3.29 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 30.06.2010

பாதாள சாக்கடை திட்ட பணியால் பாதிப்பு சாலைகளை சீர்செய்ய ரூ.3.29 கோடி ஒதுக்கீடு

தர்மபுரி, ஜூன் 30: தர்மபுரியில், பாதாள சாக்கடை திட்ட பணியால் சிதிலமடைந்த சாலைகளை செப்பனிட ரூ.3.29 கோடி ஒதுக்கீடு செய்து, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தர்மபுரி நகரமன்ற கூட்டம் தலைவர் ஆனந்தகுமார் ராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் உதவி பொறியாளர் செந்தில்குமார், தனி அலுவலர் தங்கையா, கணக்காளர் தனபால், நகராட்சி அலுவலர் மோகன், கவுன்சிலர்கள் நாட்டான் மாது, தங்கமணி, சந்திரமோகன், அன்புக்கரசி, சலிமா சையத்உமர், ஜெயந்தி, புனிதா, தகடூர் வேணுகோபால், மாது, உண்ணிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தர்மபுரி நகராட்சி தடங்கம் உரக்கிடங்கு வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், வின்ரோஸ் அமைக்க ரூ.25 லட்சமும், தண்ணீர் தொட்டி, வாட்டர் சர்வீஸ் ஸ்டேசன், காவலர் அறை கட்ட ரூ.20 லட்சமும் அனுமதிக்கப்பட்டது. தர்மபுரி நகராட்சி பச்சியம்மன் சுடுகாடு வளாகத்தில் ஈம சடங்குகள் செய்ய தேவையான அடிப்படை வசதிகள் செய்யவும், மின் வசதி செய்யவும் ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சிறுதொழில்கள் சொந்த கட்டிடத்தில் அல்லது மனையிடங்களில் செயல்பட்டால், அதற்கு குடியிருப்புகளுக்கு இணையாக சொத்துவரி விதிக்கவேண்டும். நகராட்சி தாய்சேய் நலவிடுதி பழுது பணிகள் மற்றும் மராமத்து பணிகள் செய்யவும், தேவையான உபகரணங்கள் வாங்கவும் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தர்மபுரி நகராட்சி பாதாள சாக்கடை திட்ட பணி ரூ.16.53 கோடி மதிப்பீட்டில் பணி நடைபெற்று வருகிறது. அதை ரூ.24.75 கோடியாக(மானியம் ரூ.8.27 கோடி) உயர்த்தப்படுகிறது. பாதாள சாக்கடை திட்ட பணியால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீர்செய்ய ரூ.3.29 கோடி ஒதுக்கீடு செய்வது என்பது உள்பட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

நபார்டு வங்கி உதவியுடன் 398 பேரூராட்சிகளில் சாலை மேம்பாடு

Print PDF

தினகரன் 28.06.2010

நபார்டு வங்கி உதவியுடன் 398 பேரூராட்சிகளில் சாலை மேம்பாடு

வேலூர், ஜூன் 28: தமிழகத்தில் நபார்டு வங்கி உதவியுடன் பல்வேறு உள்கட்டமைப்புப்பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன. இதில் சாலைமேம்பாட்டு பணி மற்றும் கட்டண கழிவறைகளும் கட்டப்படுகின்றன.

தமிழகத்தில் நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டு 52 பேரூராட்சிகளில் 85 பொது கட்டண கழிவறை வளாகங்கள் கட்டப்படுகிறது. இதற்காக ரூ.2 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது.

அதேபோல் மாநிலத்தில் உள்ள 398 பேரூராட்சிகளில் 684 சாலைகள் தரம் உயர்த்தப்பட்ட சாலைகளாக மாற்றப்படுகின்றன. இந்த சாலைகள் தரம் உயர்த்த மேற் கொள்ளப்படும் பணிகளுக்காக ரூ.45 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் நடப்பு நிதியாண்டு முடிவுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

 


Page 114 of 167