Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

டி.வி.டி காலனியில் ரூ.16 லட்சத்தில் தார்சாலை

Print PDF

தினகரன் 22.06.2010

டி.வி.டி காலனியில் ரூ.16 லட்சத்தில் தார்சாலை

நாகர்கோவில், ஜூன் 22: நாகர்கோவில் நகராட்சி 15 வது வார்டான டி.வி.டி காலனியில் தார்சாலை மற்றும் கழிவு நீரோடை அமைக்க நகராட்சி சார்பில் ரூ.16.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியை நேற்று காலை சேர்மன் அசோகன்சாலமன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் அந்தோனியம்மாள், துணைத் தலைவர் சைமன்ராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

ரூ.8 கோடி செலவில் பெங்களூர்&ஓசூர் நான்குவழி சுரங்கப்பாதைஅடுத்த வாரம் திறப்பு

Print PDF

தினகரன் 22.06.2010

ரூ.8 கோடி செலவில் பெங்களூர்&ஓசூர் நான்குவழி சுரங்கப்பாதைஅடுத்த வாரம் திறப்பு

பெங்களூர், ஜூன் 22:பெங்களூர்&ஓசூர் சாலையில் ரூ.8 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் நான்கு வழி சுரங்கபாதை அமைக்கும் பணி இன்னும் 10 நாட்களில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் பெங்களூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல் மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. மாநகரில் மக்கள் தொகைக்கு இணையாக வாகன பெருக்கம் இருப்பதின் காரணமாக, எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதை தவிர்க்க மாநில அரசு மற்றும் மாநகராட்சி பல முயற்சிகள் மேற்கொண்டும் மக்களின் சுமையை போக்கும் முழுமையான பலம் கிடைக்கவில்லை.

மாநகரில் சுரங்க பாலம் அமைக்கும் பணி தொடங்கினால், முடிக்க பல மாதங்கள் இழுத்து செல்லப்படுகிறது.

இதை தவிர்க்கும் நோக்கத்தில் 24 மணி நேரத்தில் அண்டர்பாஸ் என்ற திட்டம் சில மாதங்களுக்கு முன் காவிரி மற்றும் பி.டி.. சதுக்கத்தில் அமைக்கப்பட்டது. பணிகள் தொடங்கினாலும் திட்டமிட்டப்படி 24 நேரத்தில் முடிக் கவில்லை.

இது மாநகராட்சியின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாநகரில் பிரிகாஷ்ட் அண்டர்பாஸ் திட்டம் செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது. இதன் முதல் கட்டமாக மகாராணி கல்லூரி சதுக்கத்தில் பிரிகாஷ்ட் அண்டர்பாஸ் சுரங்க பாலம் அமைக்கப்பட்டது.

இதில் நல்ல முன்னேற்றம் கிடைத்ததை தொடர்ந்து, பெங்களூர்&ஓசூர் சாலையில் உள்ள லஷ்கர் சாலை சந் திப்பில் ரூ.8 கோடி செலவில் நான்கு வழிகள் கொ ண்ட பிரிகாஷ்ட் அண்டர்பாஸ் சுரங்க பாலம் அமைக் க முடிவு செய்யப்பட்டது.

இதன் அடிக்கல் நாட்டு விழா கடந்த மே 26ம் தேதி நடந்தது. மேயர் எஸ்.கே.நடராஜ் பூஜை செய்து தொடங்கி வைத்தார். 3 மாதத்திற்குள் பாலம் அமைக்க வேண்டும் என்ற இலக்குடன் தொடங்கப் பட்டது. ஆனால் அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி காரணமாக 26 நாட்களில் 70 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது.

இன்னும் 15 நாட்களுக்கும் பாலம் அமைக்கும் பணி முழுமையாக முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என்று மாநகராட்சி பொறியாளர் கே.டி.நாகராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.

 

பாதாள சாக்கடைத் திட்டம் முடிந்த இடங்களில் சிமென்ட் சாலை பணி துவக்கம் சேர்மன் ஜனகராஜ் தகவல்

Print PDF

தினமலர் 22.06.2010

பாதாள சாக்கடைத் திட்டம் முடிந்த இடங்களில் சிமென்ட் சாலை பணி துவக்கம் சேர்மன் ஜனகராஜ் தகவல்

விழுப்புரம் : விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடைப் பணிகள் முடிந்த இடங்களில் புதிய சிமென்ட் சாலை பணி துவக்கப்பட்டுள்ளதாக சேர்மன் ஜனகராஜ் தெரிவித்தார்.

விழுப்புரம் நகராட்சியில் 40 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. சாலையில் பள்ளம் ஏற்படுத்தி பாதாள சாக்கடைக்குழாய் பதிக்கப்பட்டு பணிகள் பரவலாக நடந்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்பட்டு வந்தது. சாக்கடைத் திட்டப் பணிகள் முடிந்தவுடன் சாலைகள் சீரமைக்கப்பட்டு, மீண்டும் புதிய சிமென்ட் சாலைகள் அமைக்கப்படும் என சேர்மன் ஜனகராஜ் உறுதியளித்திருந்தார். தற்போது பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ள சாலைகளில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. விழுப்புரம் நகராட்சி ஆண்கள் பள்ளி அருகே உள்ள நவாப் தோப்பு சந்தில் 160 மீட்டர் தொலைவிலான சாலை 4 லட்சம் ரூபாய் மதிப்பில் முதன் முதலாக சிமென்ட் சாலை அமைக்கும் பணியை சேர்மன் ஜனகராஜ் நேற்று துவக்கி வைத்தார். நகராட்சி கமிஷனர் சிவக்குமார், பொறியாளர் பார்த்திபன், மேற்பார்வையாளர் ஜெயப்பிரகாஷ், கவுன்சிலர்கள் வினோத், சுரேஷ்பாபு, ரகுபதி, கலைவாணன், சரவணன் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பணிகள் குறித்து சேர்மன் ஜனகராஜ் கூறியதாவது, பாதாள சாக்கடைத்திட்டப் பணிகளைத் தொடர்ந்து, அனைத்து இடங்களிலும் சிமென்ட் சாலை அமைக்க அரசிடம் 13 கோடி ரூபாய் கேட்டுப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியம் பணிகளை முடித்து அனுமதி வழங்கும் இடங்களில் தற்போது சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. நவாப்தோப்பு சந்தில் முதலாவதாக சாலைப் பணிகள் துவங்கியது. தொடர்ந்து கமலாநகர், கைவல்லியர் தெரு, மேல்வன்னியர் தெரு, இளங்கோவடிகள் தெரு என 10 இடங்களில் சாலைகள் போடப்படுகிறது. பாதாள சாக்கடைப் பணிகள் முடித்து அனுமதி வழங்கும் இடங்களில் தொடர்ந்து சாலைகள் படிப்படியாக போடப் பட உள்ளது. பாதாள சாக்கடை தொட்டிகளும் சாலை உயரத்திற்கு உயர்த்தப் பட்டு மக்களுக்கு எந்தவித பிரச் னையுமின்றி திட்டங்கள் முழுமைபடுத்தப்பட்டு வருவதாக சேர்மன் ஜனகராஜ் தெரிவித்தார்.

 


Page 116 of 167