Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

மைசூரில் வெளிவட்ட சாலை மேம்படுத்தும் பணி

Print PDF

தினகரன் 14.06.2010

மைசூரில் வெளிவட்ட சாலை மேம்படுத்தும் பணி

மைசூர், ஜூன் 14: மைசூரில் வெளிவட்டச் சாலையை 6 வழி சாலையாக மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

கர்நாடகாவில் பெங்களூருக்கு அடுத்தபடியாக மைசூர் இரண்டாவது பெரிய நகரமாக மாறிவருகிறது. மேலும் புகழ்பெற்ற சுற்றுலா நகரமாகவும், வாகனங்கள் பெருக்கமும் வளர்ந்து வருகிறது. இதை மனதில் வைத்து அவுட்டர் ரிங் சாலை ரூ.50 கோடி செலவில் கட்டப்பட்டது.

மைசூர்&பெங்களூர் நெடுஞ்சாலையில் கிழக்கு பகுதியை இணைக்கும் 7.49 கி.மீ. தூரத்திற்கு 4 வழி சாலை மற்றும் 2 வழி சாலையான 24.72 கி.மீ. தூரம் 6 வழி சாலையாக மேம்படுத்தப்படும்.

அவுட்டர் ரிங் சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.21,902.50 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு ரூ.17ஆயிரத்து 522 லட்சம் வழங்குகிறது. மாநில அரசும், மைசூர் நகரவளர்ச்சி துறையும் தலா ரூ.2,190.25 லட்சம் வழங்குகிறது. தற்போதைக்கு மத்திய அரசு ரூ.4,380.49 லட்சம் முதல் தவணையாக வழங்கியுள்ளது. மாநில அரசும் மைசூர் நகரவளர்ச்சி துறையும் தலா ரூ.547.56 லட்சம் விடுவித்தது.

முதல்கட்டமாக வெளிவட்டச் சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள இடிந்த கட்டட குப்பைகளை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் தாழ்வான பகுதிகளை சமன் செய்யும் பணியும் நடந்து வருகின்றன.

முடா திட்ட அமலாக்க ஏஜென்ஸியாக இருந்தும் ஒப்பந்தத்தை கே.எம்.சி. தனியார் நிறுவனத்திற்கு 4 பேக்கேஜ்களாக 3 ஆண்டுகளுக்கு பாரமரிப்பு ஒப்பந்தமாக விட்டுள்ளது. கடந்த ஏப்.12ல் தொடங்கிய இந்த திட்டம் பிப்ரவரி 2011ல் நிறைவடையும். ரூ.219 கோடி இத்திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் கட்டட நிறுவனம் ரூ.210.84 கோடியில் முழுமை செய்ய முன்வந்துள்ளது.

இரும்பில் உள்ள தெருவிளக்கு கம்பங்களை அகற்ற ரூ.2 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.1 கோடி கான்கீரிட் கம்பங்கள் அமைக்க செலவழிக்கப்படும். நஞ்சன்கூடு&பன்னூர் சாலையை மேம்படுத்தும் விரிவான திட்ட அறிக்கையை முடா தயாரித்து வருகிறது.

மாநில அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பித்து அனுமதி பெற இருக்கிறது. விரைவில் அவுட்டர் ரிங் சாலை 6 வழி சாலையாக மாற்றம் பெறுவதற்கு மேலும் ரூ.100 கோடி தேவைப்படுகிறது.

 

சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

Print PDF

தினமணி 14.06.2010

சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

பெரம்பலூர், ஜூன் 13: பெரம்பலூர் நகரில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளிலும் ரூ. 23.5 கோடியில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது 90 சத பணிகள் நிறைவடைந்துள்ளன. புதை சாக்கடைத் திட்டப் பணிகள் முடிவடைந்த பகுதிகளில் உடனடியாக சாலைகள் சீரமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஒரு சில பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இதனால் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் சாலைகள் காணப்படுகின்றன.

குறிப்பாக, பெரம்பலூர் பகுதியின் பிரதான சாலைகளான வடக்குமாதவி சாலை, ரோவர்பள்ளி சாலை, துறைமங்கலம் கே.கே.நகர், கல்யாண் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் சீரமைக்கவில்லை. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

இதனிடையே, பெரம்பலூர் நகரில் வெள்ளிகிழமை மழை பெய்ததால், குழிகளில் தண்ணீர் தேங்கிக் கிடந்ததால், மக்கள் அச்சத்துடன் வாகனங்களை இயக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். எனவே, சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

பெங்களூர் மாநகராட்சி சாலைகளுக்கு காப்பீடு வசதி அமைச்சர் ஆலோசனை

Print PDF

தினகரன் 11.06.2010

பெங்களூர் மாநகராட்சி சாலைகளுக்கு காப்பீடு வசதி அமைச்சர் ஆலோசனை

பெங்களூர், ஜூன் 11: மாநிலத்தின் அனைத்து மாநகராட்சிகளில் உள்ள சாலைகளை காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வரும் யோசனை அரசிடம் உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் ஆலோ சனை நடத்தியுள்ளார்.

ஹூப்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட வித்யாநகரில் 800 மீட்டர் சாலையை, அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்த கடந்த 2007 ஆகஸ்ட் முதல் 2008 ஜூலை வரை ரூ.2 லட்சத்திற்கு காப்பீடு செய்தனர். இதற்கான ஆண்டு பிரீமியம் ரூ.303ஐ அப்பகுதி மக்களே சேகரித்து வங்கியில் செலுத்தினர்.

நாட்டில் இதுவரை எங்கும் இதுபோன்று செயல்படாததால், லிம்கா சாதனை புத்தகத்தில் இது இடம் பெற்றது. தற்போது அப்பகுதி மக்கள் சாலையை ரூ.9 லட்சத்திற்கு காப்பீட்டு செய்துள்ளனர்.

இதற்கான பிரீமியம் தொகை ரூ.910யை செலுத்தி வருகிறார்கள். வித்யாநகர் பகுதி மக்களின் புதுமையான முயற்சி, மாநிலம் முழுவதும் செயல்படுத்தும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை மாநிலம் முழுவதும் உள்ள 7 மாநகராட்சிகளில் செயல்படுத்த அரசு யோசித்து வருகிறது.

மாநகரில் உள்ள சாலைகளை பொதுமக்கள் பராமரித்து கொள் வதுடன், காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கும் நடவடிக்கை மேற்கொண்டால், ஒப்பந்த காரர்கள் மூலம் மேற் கொள் ளும் பணியில் குளறுபடி நடந் தாலோ அல்லது இயற்கை சீற்றத்தால் நாச மடைந்தாலோ, காப்பீடு பெறும் நிறுவனம், புனரமைப்பு பணியை மேற்கொள்ளும்.

இதன் மூலம் அரசுக்கு நிதி சுமை ஏற்படாது என்பதால், இதை செயல்படுத்த நகர வளர்ச்சிதுறை அமைச்சர் சுரேஷ்குமார் முடிவு செய்துள்ளார்.

இத்திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே நகர வளர்ச் சிதுறை அமைச்சக அதிகாரிகளுடன் முதல் சுற்று ஆலோசனை முடித்துள்ள அமைச்சர், திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக சாதக&பாதகம் குறித்து அறிக்கை கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

இந்த வார இறுதியில் அறிக்கை கிடைத்ததும், நகர வளர்ச்சி சட்டத்தில் சில திருத்தம் செய்து, வரும் மழை கால கூட்டத்தொடரில் பேரவையில் தாக்கல் செய்து, உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்று செயல் படுத்தும் யோச னையில் அமைச்சர் சுரேஷ்குமார் உள்ளார்.

 


Page 119 of 167