Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ரோடு சீரமைப்பிற்கு ரூ.7 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 30.04.2010

ரோடு சீரமைப்பிற்கு ரூ.7 லட்சம் ஒதுக்கீடு

கம்பம்:கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழானை முன்னிட்டு, கோயில் அமைந்துள்ள பகுதியில் ரோட்டை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் ஏழு லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. கம்பம் கவுமாரியம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியில் ரோடு போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. டிராபிக் சிக்னலில் இருந்து மாரியம்மன் கோயில் வரையிலும், காளியம்மன் கோயில், ஆடுஅடிக்கும் தொட்டியிலிருந்து கோயில் வரையில் உள்ள ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல், பூக்குழி இறங்குதல் போன்ற நேர்த்தி கடன்கள் நிறைவேற்றுவதற்கு பக்தர்களுக்கு கோயிலுக்கு வர இந்த ரோட்டையே பயன்படுத்தவேண்டியதுள்ளது. கோயில் விழா துவங்குவதை முன் னிட்டு நகராட்சி நிர்வாகம் ஏழு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் மாரியம்மன் கோயில் ரோட்டை சீரமைக்க முடிவு செய்துள்ளது

Last Updated on Friday, 30 April 2010 06:57
 

ரங்கவிலாஸ் மில் திட்டச்சாலை பணி துவக்கம்

Print PDF

தினமணி 29.04.2010

ரங்கவிலாஸ் மில் திட்டச்சாலை பணி துவக்கம்

கோவை, ஏப். 28: கோவை ரங்கவிலாஸ் மில்} நவஇந்தியா இடையிலான திட்டச்சாலை பணி புதன்கிழமை துவக்கப்பட்டது.

÷இப்பணிகளை மாநகராட்சி மேயர் ஆர்.வெங்கடாசலம் துவக்கிவைத்தார் (படம்). துணை மேயர் நா.கார்த்திக், மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா, கிழக்கு மண்டல தலைவர் எஸ்.எம்.சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

÷அவிநாசி சாலை முதல் ஜீ.வி.ரெசிடென்சி வரையிலான ரங்கவிலாஸ் 40 அடி திட்டச்சாலை சுமார் 2.2 கி.மீ. தூரத்தில் ரூ. 2.75 கோடியில் அமைக்கப்படவுள்ளது.

ஜீ.வி.ரெசிடென்சி அருகே செüரிபாளையம் சாலையை இணைக்கும் வகையில் ரூ. 75 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது. ரங்கவிலாஸ் திட்டச்சாலை பணிகள் ரூ. 3.50 கோடியில் நடைபெற உள்ளன.

 

குடந்தை நகராட்சியில் சாலைகள் அமைக்க கலந்துரையாடல்

Print PDF

தினமணி 24.04.2010

குடந்தை நகராட்சியில் சாலைகள் அமைக்க கலந்துரையாடல்

கும்பகோணம், ஏப். 23: கும்பகோணம் நகராட்சிப் பகுதியில் உலகத் தரத்திற்கு இணையான சாலைகள், பாலங்களை தமிழ்நாடு நகர்புறசத் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்க நகர்மன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகர்மன்றத் தலைவர் சு.ப. தமிழழகன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் பூங்கொடி அருமைக்கண், அதிகாரிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இத்திட்டம் தயாரிக்கும் பணியை மேற்கொண்டுள்ள இன்மாஸ் நிறுவனத் திட்ட மேலாளர் முருகன் கூறியது:

எதிர்வரும் 20 ஆண்டுகள் உழைக்கும் வகையிலும், சர்வதேசத் தரத்திற்கு இணையாகவும் அமைய உள்ள இத்திட்டத்திற்கு, இந்நகரின் சாலை விவரம் உள்ளிட்டவை குறித்த அறிக்கையை அடுத்த வாரம் அரசிடம் அளிக்கவுள்ளோம்.

இத் திட்டத்தின்படி, இங்குள்ள பழைய,புதிய பாலங்கள் புதுப்பிக்கப்படும். தேப்பெருமாநல்லூர் உள்ளிட்ட நான்கு வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டு, இரு புறங்களிலும் சாலைகள், சாலையோரப் பூங்கா, நடை பாதை, சுரங்கப் பாதை, பேருந்து நிழல்குடை, காமராஜர் சாலை, கஸ்தூரிபாய் சாலையை இணைக்கும் வகையில் ரயில்வே பாலம்,போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இணைப்புச் சாலைகள், 22 மீட்டர் அகலமுள்ள சாலைகளில் டக்ட் வசதி, உள்ளிட்ட பல திட்டங்கள் இடம் பெற்றுள்ளன என்றார் அவர்.

அப்போது, ஒவ்வொரு வார்டு பகுதியிலும் உள்ள தெருக்களில் என்னென்ன மேம்பாடு செய்யப்படவுள்ளது என்பதை விளக்கும் விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் எனவும், வாய்க்கால்களில் ஆக்ரமிப்புகள் இருப்பதை அகற்றுவது உள்ளிட்ட பல விவரங்களைத் தர வேண்டும் எனவும் உறுப்பினர்கள் தரப்பில் கோரினர். விவரங்களை அடுத்த வாரம் அளிக்கவுள்ளதாகத் தெரிவித்தார் திட்ட மேலாளர் முருகன்.

Last Updated on Saturday, 24 April 2010 09:18
 


Page 128 of 167