Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ரூ.25 கோடியில் புதிய சாலைகள் அமைக்க திட்டம்

Print PDF

தினமணி 22.04.2010

ரூ.25 கோடியில் புதிய சாலைகள் அமைக்க திட்டம்

கடலூர், ஏப்.21: கடலூர் நகராட்சியில் ரூ. 25.35 கோடியில் புதிய சாலைகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதற்கு புதன்கிழமை நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்களின் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கடலூர் நகராட்சி இயல்புக் கூட்டம் புதன்கிழமை நகராட்சித் தலைவர் து.தங்கராசு தலைமையில் நடந்தது.

பாதாளச் சாக்கடைத் திட்டத்தாலும் மழையினாலும் பழுதடைந்த சாலைகளை புதியதாக அமைக்க நகராட்சி திட்டம் தயாரித்து உள்ளது. அதன்படி 46.9 கி.மீ. தார்ச் சாலையும், 48.5 கி.மீ. சிமென்ட் சாலையும் (160 சாலைகள்) அமைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

÷இச்சாலைகள் ரூ. 25.35 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இத்தொகையை அரசு மானியத்துடன் கடனாக வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசைக் கோரலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மற்ற தீர்மானங்கள்:

நகராட்சி கூட்ட மண்டபத்தில் அம்பேத்கர் படம் வைப்பது. இத்தீர்மானத்தை நகராட்சித் துணைத் தலைவர் தாமரைச்செல்வன் கொண்டு வந்தார்.

ஆற்றுத் திருவிழாவுக்காக பெண்ணை ஆற்றங்கரையை சுத்தம் செய்த பணிக்கு ரூ. 1.5 லட்சம் அனுமதிப்பது. கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் புதுயுகம் மற்றும் குட்லக் என்டர்டெய்ன்மெண்ட் சர்வீசஸ் நிறுவனத்துக்கு பொருள்காட்சி நடத்த தடையில்லாச் சான்று வழங்குவது.

÷கடலூர் நகராட்சிப் பகுதிகளில் தற்போது ரூ.424 லட்சத்துக்கு பணிகள் நடந்து வருகின்றன. ரூ.505 லட்சத்துக்கு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இப்பணிகளை பார்வையிட மேற்பார்வையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், 2 மேற்பார்வையாளர் பணியிடங்களை, ஒப்பந்தப்புள்ளி கோரி மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மூலம் நிரப்ப அனுமதிக்கலாம்.

÷இதனால் ஆண்டுச் செலவு ரூ. 61 ஆயிரம். கடலூர் நகராட்சி பகுதியில் 34 குடிசைப் பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள 14,911 குடும்பங்களின் வறுமை மற்றும் வாழ்வாதார நிலைகளை கண்டறிய கணக்கெடுக்கும் பணிக்கு, ரூ. 2.5 லட்சம் அனுமதிப்பது.

நகராட்சி சார்பில் கம்மியம்பேட்டையில் அமைக்கப்பட்டு உள்ள நவீன எரிவாயு தகன மேடையை எவ்வாறு செயல்படுத்துவது, நிர்வகிப்பது மற்றும் பராமரிப்பது என்பது பற்றி நகராட்சித் தலைவர் உள்ளிட்டோர் பழநி, ஈரோடு நகராட்சிகளுக்குச் சென்று பார்த்து வந்தச் செலவுத் தொகை ரூ. 60 ஆயிரம் அனுமதிப்பது என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Thursday, 22 April 2010 09:37
 

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் ரூ.1.60 கோடியில் தார்ச்சாலை

Print PDF

தினமலர் 22.04.2010

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் ரூ.1.60 கோடியில் தார்ச்சாலை

பெரம்பலூர்:பெரம்பலூர் நகராட்சி பகுதியில் ரூ 1.60 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி துவக்கப் படவுள்ளதாக நகராட்சி தலைவர் ராஜா கூறினார்.பெரம்பலூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் ராஜா தலைமையில் நேற்று நடந்தது. துணை தலைவர் முகுந்தன், ஆணையர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் நிறைவேற்றப்படவேண் டிய பணிகள் குறித்து பேசினர். பின்னர் நகராட்சி தலைவர் ராஜா பேசுகையில், பெரம்பலூர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியால் அனைத்து பகுதிகளும் குண்டும் குழியுமாக காணப் பட்டது. இதை கருத்தில் கொண்டு 1 முதல் 5 வார்டு வரைஉள்ள பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதையடுத்து 6, 7,8,9, 10,11,12,14,15,16,17,18, 19,20,21 ஆகிய 15 வார்டு பகுதியில் உள்ள சாலைகளை ரூ 1.60 கோடி மதிப்பில் புதிய தார் சாலைகளாக அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் இன்னும் சில தினங்களில் துவக்கப்படவுள்ளது.

திருச்சி மாவட்டம், தாளக்குடி கொள்ளிடத்தில் இருந்து பைப்லைன் மூலம் வழியோரக் கிராமங்கள் மற்றும் பெரம்பலூர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு வந்து விநியோகம் செய்யப்படுவதால் பெரம்பலூர் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க தாளக்குடியிலிருந்து தனியாக பெரம்பலூர் நகராட்சிக்கு நேரடியாக பைப்லைன் அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.

தெருநாய்களை பிடித்து கருத்தடை ஆபரேசன் செய்ய நகராட்சி முடிவு செய்துள்ளது என்றார்.கூட்டத்தில் கவுன்சிலர்கள் ராமச்சந்திரன், அன்புதுரை, கனகராஜ், சரவணன், கருணாநிதி, ரமேஷ் பாண்டியன், ஜெய்குமார், சுசீலா, புவனேஸ்வரி, ஈஸ்வரி, பொற்கொடி, கண்ணகி மற்றும் நகராட்சி பொறியாளர் மணிமாறன், எழுத் தர் தங்கராஜ், சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடாஜலம், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 22 April 2010 06:58
 

தார்ச் சாலை அமைக்கும் பணி ஆய்வு

Print PDF

தினமணி 21.04.2010

தார்ச் சாலை அமைக்கும் பணி ஆய்வு

பெரம்பலூர், ஏப். 20: பெரம்பலூர் 15-வது வார்டு பகுதியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச் சாலை அமைக்கும் பணியை பெரம்பலூர் நகராட்சித் தலைவர் எம்.என். ராஜா செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட 21 வார்டுகளிலும் ரூ.23.4 கோடி மதிப்பீட்டில் புதைச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில் இத் திட்டம் நிறைவடைந்த பகுதிகளில் புதிய தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, 15-வது வார்டு பகுதிக்குள்பட்ட கம்பன் நகர், தம்பி நகர், மண் ஒட்டர்தெரு, மேட்டுத்தெரு, ராம் தியேட்டர் எதிர்புறம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்த் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை நகராட்சித் தலைவர் எம்.என். ராஜா பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

பெரம்பலூர் நகராட்சிப் பகுதியில் 95 சதம் புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. விரைவில் அத் திட்டம் முழுமை பெறும். இப் பணிகள் முடிவடைந்த பகுதிகளில் புதிய தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஒருசில பகுதிகளில் புதைச் சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன், அப் பகுதிகளில் தார்ச் சாலை அமைக்கப்படும் என்றார் அவர்.

இந்த ஆய்வின் போது, நகராட்சிப் பொறியாளர் மணிமாறன், பணி மேற்பார்வையாளர் கார்த்திக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Wednesday, 21 April 2010 10:32
 


Page 130 of 167