Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

இனாம் கரூர் நகராட்சியில் சாலை சீரமைக்க ரூ.42 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 20.04.2010

இனாம் கரூர் நகராட்சியில் சாலை சீரமைக்க ரூ.42 லட்சம் ஒதுக்கீடு

கரூர்: இனாம் கரூர் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் கவிதா தலைமையில் நடந்தது. கமிஷனர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். நகராட்சி பகுதியில் மண் சாலையை தார்சாலையாக மாற்றும் பணியில் 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒன்பதாவது வார்டு கொங்கு திருமண மண்டப சாலை, ஆறாவது வார்டு ராமகிருஷ்ணபுரம் குறுக்கு தெரு, 21வது வார்டில் பொன்நகரில் சிமென்ட் சாலை, எட்டாவது வார்டு பாரதி நகரில் தார் சாலை உள்ளிட்ட ஒன்பது பணிகள் மொத்தம் இரண்டாயிரத்து 305 மீட்டர் தூரத்துக்கு செய்யப்படவுள்ளது. மேலும், இரண்டு முதல் 21வது வார்டுகளுக்கு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள ஆழ்துறை கிணற்றில் மின்மோட்டார் பொருத்தி, சின்டெக்ஸ் டேங்க் வைத்து மக்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த 27.20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கவுன்சிலர்கள் காமராஜ், சவுந்தர்ராஜன், கோபாலகிருஷ்ணன், கிரிவாசன் உள்ளிட்ட அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

நாளை மறுநாள் மாநகராட்சி கூட்டம் 12 ரோடுகள் சீரமைக்க 2 கோடி அனுமதி : பக்கிள் ஓடை இரண்டாம் கட்ட பணி துவக்க ஆயத்தம்

Print PDF

தினமலர் 17.04.2010.

நாளை மறுநாள் மாநகராட்சி கூட்டம் 12 ரோடுகள் சீரமைக்க 2 கோடி அனுமதி : பக்கிள் ஓடை இரண்டாம் கட்ட பணி துவக்க ஆயத்தம்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் வரும் 19ம் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் 2 கோடி ரூபாய் செலவில் 12 ரோடுகள் அமைப்பதற்கு அனுமதியளித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் வரும் 19ம் தேதி கூட்ட அரங்கில் மேயர் கஸ்தூரிதங்கம் தலைமையில் நடக்கிறது. துணைமேயர் தொம்மைஜேசுவடியான், கமிஷனர் குபேந்திரன், இன்ஜினியர் ராஜகோபாலன், சுகாதார அதிகாரி (பொ) திருமால்சாமி மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொள்கின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சுமார் 85 கோடி ரூபாய் செலவில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் தருவாயை எட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் பாதாள சாக்கடை திட்டத்தால் சேதமாகிய ரோடுகளை சீரமைப்பு செய்யும் பணிகளில் மாநகராட்சி துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.ஏற்கனவே சுமார் 12 கோடியில் மாநகராட்சி பகுதியில் ரோடுகள் சீரமைப்பு செய்ய அரசிடம் இருந்து சிறப்பு நிதி பெறுவதற்கான தீர்மானம் நிறைவேற்றபட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை மறுநாள் நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் அமெரிக்கன் ஆஸ்பத்திரி மெயின் ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி முதல் எட்டயபுரம் ரோடுவரை, அம்பேத்கர்நகர் மெயின் ரோடு முதல் ஸ்டேட் பாங்க் காலனி சந்திப்பு வரை, டி.எஸ்.எப் சந்திப்பு முதல் அம்பேத்கர்நகர் மெயின் ரோடு சந்திப்பு வரை, கிருஷ்ணராஜபுரம் முதல் டி.எஸ்.எப் சந்திப்பு வரைஎஸ்.எஸ்.மாணிக்கபுரம் மெயின் ரோடு, சாமுவேல்புரம் முதல் கிருஷ்ணராஜபுரம் வரை, அண்ணாநகர் 5வது குறுக்குத்தெரு, ராமேஸ்வரம் மெயின் ரோடு அமெரிக்கன் ஆஸ்பத்திரி சந்திப்பு முதல் செயின்ட் தாமஸ் பள்ளி வரை, சிவந்தாகுளம் மெயின் ரோடு, போல்டன்புரம் 2வது தெரு, கணேஷ்நகர் மெயின் ரோடுராமசாமிபுரம் முதல் சிதம்பர நகர் மொத்தம் 12 இடங்களில் ரோடு போட ஒரு கோடியே 95 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அனுமதிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த பணியினை உள்ளூர் திட்டக்குழுமம் நிதியினை பெற்று பணிகள் செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
மாநகராட்சி பகுதியில் உள்ள பக்கிள் ஓடையில் முதல் கட்டமாக 1.82 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாட்டு பணிகள் 6 கோடியே 98 லட்சத்தில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் கட்டமாக 2.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு பக்கிள் ஓடை சீரமைப்பு செய்யும் பொருட்டு சிமென்ட்தளம், சிறு கால்வாய் கட்டும் பணிகளுக்கு 7 கோடியே 50 லட்ச ரூபாயிற்கு அரசு அனுமதியளித்துள்ளது.இந்த நிதியில் 6 கோடி ரூபாய் கேளிக்கை வரி ஈடுசெய்யும் நிதியில் இருந்து மானியமாகவும், மீதியுள்ள தொகை ஒரு கோடியே 50 லட்சத்தை மாநகராட்சி பொது நிதியில் இருந்து செலவு செய்யவும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வந்த அரசாணை கூட்டத்தில் வைக்கப்பட்டு முடிவு செய்யப்படுகிறது.

கூட்டத்தில் 2010-2011ம் ஆண்டின் உத்தேச வரவு செலவு மதிப்பீடு மற்றும் 2009-2010 ஆண்டு திருத்திய வரவு செலவு மதிப்பீடு ஆகியவற்றிற்கும் ஒப்புதல் பெறும் தீர்மானத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

Last Updated on Saturday, 17 April 2010 06:46
 

மதுரையில் உலக தரத்தில் சாலைகள் ரூ.பல கோடி மதிப்பீட்டில் அமைகிறது

Print PDF

தினமலர் 17.04.2010

மதுரையில் உலக தரத்தில் சாலைகள் ரூ.பல கோடி மதிப்பீட்டில் அமைகிறது

மதுரை : மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத் தரம் வாய்ந்த சாலைகள் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. மேயர் தேன்மொழி தலைமையில், கமிஷனர் எஸ்.செபாஸ்டின், துணை மேயர் மன்னன் முன்னிலையில் கூட்டம் நடந்தது. திட்டம் குறித்து தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு சேவை நிறுவன ஆலோசகர் சீனிவாசன் விளக்கினார்.

அவர் கூறியதாவது: தமிழகத்தில் 11 ஊர்களில் உலகத் தரத்தில் சாலைகள் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு தமிழக அரசு சார்பில், ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மதுரையில் மட்டும் 750 கி.மீ., தூரத்திற்கு சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன. இச்சாலைகளின் ஓரம் நடைபாதை, விளக்குகள், சுரங்க பாதைகள் அமைக்க சர்வே பணிகள் நடக்கின்றன.

மாநகராட்சியில் முதல் கட்டமாக 42, 63, 64, 65 ஆகிய வார்டுகள், இதற்காக முன்மாதிரியாக தேர்வு செய்யப்பட உள்ளன. தொடர்ந்து மற்ற வார்டுகளுக்கு இப்பணி விரிவுபடுத்தப்படும். வளரும் மக்கள் தொகையை கணக்கில்கொண்டு திட்டம் செயல்படுத்தப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சாலைகளை தோண்டும் அவசியம் இல்லாத வகையில், குடிநீர், பாதாள சாக்கடை போன்ற பல்வேறு பணிகள் முடிந்த சாலைகள் தேர்வு செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் ஏராளமான மரங்களும் வளர்க்கப்படும். அனைத்து பணிகளும் ஓராண்டுக்குள் முடியும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தலைமை பொறியாளர் கே.சக்திவேல், கண்காணிப்பு பொறியாளர் ஆர்.விஜயகுமார், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Saturday, 17 April 2010 06:34
 


Page 131 of 167