Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சிவகங்கை நகராட்சி 27 வது வார்டில் 'பளிச்' ரோடுகள்

Print PDF

தினமலர் 24.12.2009

சிவகங்கை நகராட்சி 27 வது வார்டில் 'பளிச்' ரோடுகள்

சிவகங்கை: சிவகங்கை நகராட்சி 27 வது வார்டில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து "பளிச்' ரோடுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நகரில் நத்தை வேக பதாள சாக்கடை பணியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தெரு, ரோடுகளில் நடக்கவே முடியாத அளவிற்கு குழிகள் மக்களை வதைக்கின்றன. ஆனால் பின் தங்கிய பகுதியான 27 வார்டில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து ரோடு புதுப்பிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

கவுன்சிலர் ஆனந்தி (தி.மு..,) கூறியதாவது: தேர்தலின் போது கூறிய வாக்குறுதிகளில் 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. குடிசை பகுதி மேம்பாடு திட்டத்தில் 40 பயனாளிகளுக்கு தலா 80 ஆயிரம் ரூபாயில் (மானியம்) புது வீடுகள் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளன. புதிதாக 40 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் சோடியம் விளக்குகள், ஒரு ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இலவச "டிவி' இந்த வார்டில் மட்டுமே கொடுத்துள்ளோம். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அனைவருக்கும் காஸ் அடுப்பு வழங்கப்பட்டுள்ளது. உணவுத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தி நிரந்தர ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு புது ரேஷன் கார்டு, முதியோர், விதவை உதவி தொகை, மகளிர் குழுக்களுக்கு சுழல் நிதி, கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன் என உதவிகளை செய்து வருகிறேன். மூன்று லட்ச ரூபாயில் கலையரங்கம் கட்டப்பட உள்ளது. சமுதாய கூடம், ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம், நூலகம், பூங்கா உள்ளிட்ட பணிகளுக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது,'' என்றார். இங்கு குடியிருக்கும் லட்சுமி கூறுகையில், ""கட்சி பேதமின்றி அனைவருக்கும் இலவச "டிவி', காஸ் அடுப்பு வழங்கப்பட்டுள்ளது. வீடு கட்டும் திட்டத்தில் பாரபட்சமின்றி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், '' என்றார

Last Updated on Thursday, 24 December 2009 09:41
 

போக்குவரத்து வசதிக்காக மாநகராட்சி கடைகள் இடிப்பு

Print PDF

தினமலர் 23.12.2009

போக்குவரத்து வசதிக்காக மாநகராட்சி கடைகள் இடிப்பு

திருப்பூர்:திருப்பூர், பல்லடம் ரோட்டில் சந்தைப் பேட்டைக்கு முன் பகுதி யில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில், உழவர் சந்தை ரோட்டை ஒட்டியுள்ள இரு கடைகள், நேற்று இடிக்கப்பட்டு, அவ் வழியாக வாகனங்கள் திரும்ப வசதியாக, ரோடு அகலப்படுத்தப்பட்டது.திருப்பூரில், பல்லடம் ரோட்டை ஒட்டிய உழ வர் சந்தை ரோட்டில் செல்லும் மினி பஸ்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் ஏ.பி.டி., ரோடு வழியாக, கருவம் பாளையம் பகுதியை சென்றடைகின்றன. அதேபோல், கருவம் பாளையம் பகுதியில் இருந்து பல்லடம் ரோட் டுக்கு, அவ்வழியாக வாகனங்கள் செல்கின் றன. அதனால், உழவர் சந்தை ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகளவில் காணப் படுகிறது. அந்த ரோடு, பல்ல டம் ரோட்டில் இணை யும் இடத்தில், வாகனங் கள் திரும்ப சிரமமான நிலை காணப்பட்டது.

அதனால், உழவர் சந்தை ரோடு முன் பகுதி யில், மாநகராட்சி சந்தைப்பேட்டை வணிக வளாகத்தில் உள்ள இரு கடைகளை அகற்றினால், வாக னங்கள் திரும்ப வசதி யாக இருக்கும் என மாநகராட்சி நிர்வாகம் கருதியது; உடனே, அவ்விரு கடைகளை யும் இடித்து, அப்புறப் படுத்த நடவடிக்கை எடுத்தது. அதன்படி, சந்தைப் பேட்டை வணிக வளாக கட்டடத்தில் வடபுறம், உழவர் சந்தை ரோட்டை ஒட்டியிருந்த இரு கடைகள் நேற்று இடிக்கப்பட்டன. மாநக ராட்சி உதவி செயற் பொறியாளர் கண்ணன் மேற்பார்வையில், அக் கடைகள் இடிக்கப்பட் டன. அந்த ரோட்டின் முன் பகுதி அகலப்படுத் தப்பட்டதால், அவ்வழி யாக வாகனங்கள் திரும்ப வசதி ஏற்பட் டுள்ளது.

 

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு தார் சாலைகள்

Print PDF

தினமலர் 21.12.2009

 


Page 152 of 167